25.8.09

சாலையோர உணர்வகம்.








மதுரையை விட்டுக்கிளம்பும்போது மணி பதினொன்றுக்குமேல் ஆகிவிட்டது. கண்ணனை அங்கிருந்து இழுத்துவராதகுறையாக அழைத்துவந்தோம். நேரம் ஆக ஆக கண்ணன் கூடுதல் அரசியல் பேசுவார் முழித்திருந்து கேட்டே ஆக வேண்டும். எனக்கோ முதன் முதலாக சென்னைக்கு காரில் போகிற ஆர்வம் அதிகமாக இருந்தது. நான் குடித்திருந்த பீரை அனாயசமாகச் சந்திக்கிற தைரியம் வந்துவிட்டது. இல்லையானால் திருச்சி, விழுப்புரம் விக்கிரவாண்டி மூத்திரக்கேண்டீனில் எல்லாம் இறங்கி தலைதெறிக்க ஓடவேண்டும். அந்தக்கார் ஒரு அரசுக்கு சொந்தமான கார். யாரோ ஒரு உயர் அதிகாரி மதுரை வந்து இறங்கிவிட்டு, காரை திரும்ப அணுப்பியிருப்பார் போலிருக்கிறது. திரும்புகிற வெற்று வாகனத்துக்கும் அதன் ஓட்டுனருக்கும் நாங்கள் துணைக்கு அழைக்கப்பட்டோம். மூன்று பேருக்குமான பஸ் கட்டணம் கொடுத்தால் போதும் என்று ஓட்டுனரும் இறக்க குணம் காட்டினார்.
வலிய வந்த இந்த சீதேவியின் தைரியத்தால்தான் கண்ணன் கூடுதல் சரக்கடித்துவிட்டு கூடுதல் அரசியலுக்குள் வந்துவிட்டார். மாது சில நேரம் அவருக்கு ஈடு கொடுத்து விவாதிப்பான் அப்போது நான் தூங்கிவிடுவேன்.சில சுவாரஸ்யமற்ற விசயங்களைப் பேசும்போது கஷ்டப்பட்டு தூங்கிவிடுவான்.
செல்வாவானால் எப்போதும் லேபர் லா, இண்டஸ்ற்றியல் டிஸ்ப்யூட் ஆக்ட், குறித்த நுணுக்கங்களயே பேசிக்கொண்டு வருவார். கோணங்கியோடு இருந்தால் ஒரு பாண்டசி நாவலை காட்சிப்படுத்திப் பார்த்தது போலிருக்கும். பிரகதீசோடும் தனிக்கொடியோடும் கவிதை பாடல்கள், ஹாஸ்யக்கதைகள் பேசியது, ஒரு நிலா நாளில் நானும் மாதுவும் எங்கள் பால்ய நாட்களை சென்சாரில்லாமல் ரிவைண்ட் செய்து பரிமாறிக்கொண்டது, ஒரு புது வருட முன்னிரவில் விடிய விடிய பாடல்கள் பாடிக்கொண்டிருந்ததெல்லாம் மதுவின் மீது மரியாதை கூட்டிய தருணம்.

இப்போது நான் தூங்கிவிட்டேன். கண்ணன் பேசுகிற கதை நாயகர்கள் என் கனவில் குணச்சித்திர வேடம் ஏற்றுக்கொண்டு கூடவந்தார்கள். இடையில் எதோ ஒரு இடத்தில் கார் நின்றிருக்க வேண்டும். அப்போது நான் அவளோடு ஒரு மல்லிகை வனத்தில் பேசிக்கொண்டிருந்தேன். கார் கிளம்பும்போது மல்லிகையோடு ஒல்ட் காஸ்க்கின் வாசனையும் சேர்ந்து வந்தது. அது கானாமல் போய் மீண்டும் நான் ஒரு குறுக்கீடற்ற கனவுக்குள் கிடந்தேன்.
நான் உலுக்கி எழுப்பப்பட்டபோது " வேண்டாம் இனி ஒரு சொட்டுக்கூட குடிக்கமாட்டான், பழமா? துக்கம் தான் அவனுக்கு எல்லாம்" என்று எனக்காகப் பேசியபடியே மாது கடந்து போனான்.

தூக்கம் கலைந்திருந்தது அது எதோ ஒரு ஊர். ஓட்டுனர் இறங்கி முகம் கழுவிக்கொண்டார், ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு இருட்டுப்பக்கம் போனார். அவர் திரும்பி வந்த போது ஒரு நடு வயதுக்காரர் அவரோடு பேசிக்கொண்டு வந்தார். நானும் இறங்கி இருட்டுக்குள் போனேன் அந்த நடு வயதுக்காரர் எனக்குப் பின்னால் வந்து " சார் இன்னும் கொஞ்சம் தள்ளிப்போங்க" என்று எனக்கு மிக அருகில் வந்து நின்றார். அப்றம் நீண்ட நாள் ஸ்நேகிதனைப்போல என்ன சார் ஒரு சொட்டு மழ கூட பேயலயே என்று சொல்லியபடியே சரக்கு வேணுமா கேட்டார், அப்டீன்னா, சாராயம்.இல்ல மயிலு வேணுமா சார், அப்டீன்னா..அவர் கெக்கலிட்டுசிரித்தார்.

எல்லாம் கலைந்து ஓடியது இப்போது. மாதுவும், கண்ணனும் திரும்பி வருகிற சத்தம் கேட்டது. அவர்களோடு இன்னொரு உருவம் தொடந்து வந்தது. மாது தப்பித்து ஓடிவருகிற நடையோடு வந்தான். நான் யூகித்தது போலவே அது ஒரு பெண்.பதினேழு வயதுக்கு மிகாத பெண். காருக்குள் தலையை நீட்டி " என்ன இந்த மாமா கெனாவுல இருக்காரா " என்னைப்பார்த்து கேட்டது. அவரத்தொந்தரவு பண்ணாத இங்க வா என்று கண்ணன் கூப்பீட்டார். மூர் மார்க்கெட்டில் ஆயத்த ஆடை வாங்குக்கிற தோரணையில் அந்தப்பெண்மனியோடு உரையாடிக்கொண்டிருந்தார். சில வார்த்தைகள் எங்களுக்கு புரியவில்லை. கண்ணா வாரயா இல்லயா மாது கண்டிப்பான குரலில் அதட்டி விட்டு லூசு லூசு தனக்குள் சொல்லிக்கொண்டான். அவர் அந்தப் பெண்ணைத் தவிர்த்துவிட்டு வந்து காரில் ஏறினார். அப்போது ஓட்டுனரின் தேனீர்க் குவளையில் பாதி மிச்சமிருந்தது.

அவள் ஓட்டுனர் பக்க கதவைத்திறந்து கொண்டு கண்ணனுக்கு எதிராக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாள். " பூரா ஒயின்ஷாப்பிலே காலி, காசில்லம்மா " " பிடிக்கலன்னு சொல்லுங்க, பொய்யி சொல்லாதீங்க மாமா" என்று சொன்னாள்." செரி காசு வாண்டா, நா அப்டீயே ஒங்ககூட கார்ல மெற்றாஸ் வாரன் " என்றாள். மாது தலையில் அடித்துக்கொண்டு. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ஓட்டுனர் வந்து வாகனத்தைக்கிளப்பினார். ஏதேதோ சொல்லிக்கொண்டு கடந்து போனவள் இன்னொரு லாரிக்காரனிடம் தன்னை மருமகளாக்கிக் கொண்டிருந்தாள். ஓட்டுனரும் கண்ணனும் இதுபோல வேறு வேறு கதைகளைப் பேசிக்கொண்டு வந்தனர். மாது ஜன்னல் பக்கம் வெறித்துப் பார்த்தபடி இருந்தான். விராலிமலை பெயர்ப்பலகை எங்களைக்கடந்து போனது.
இரவின் ஆடைகளை தூக்கி எறிந்து விட்டு சுத்தமாக அவள் தூங்குகிற பகலில் எப்படியும் ஒருவன் வருவான் இல்லையா ?. சத்தியமாய் அவனை மாமா என்று அழைக்கமாட்டாள்.

19 comments:

Kumky said...

அந்த போட்டோவும் பின்னிருக்கிற வாசகங்களும்......

ஈரோடு கதிர் said...

அருமையான எழுத்து நடை

//"பூரா ஒயின்ஷாப்பிலே காலி, காசில்லம்மா"//
தலைவா... இதுதான் காரணமா!!!!

மாதவராஜ் said...

அந்தப் பெண்ணின் சோகமும், ஆழமும் கொண்ட கண்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

நேசமித்ரன் said...

அருமையான எழுத்து நடை

காமராஜ் said...

நன்றி கும்கி,

காமராஜ் said...

நன்றி தோழா
0
நன்றி கதிர்

காமராஜ் said...

நன்றி நேசமித்ரன்

நன்றி செய்திவலையம் குழுவுக்கு

மண்குதிரை said...

rasiththeen sir

நிலாமதி said...

அழகான் எழுத்து நடை , கருத் தை சொல்லாமல் சொல்கிறது .பாராடுக்கள். நிலாமதி

காமராஜ் said...

கதிர் அவசரத்தில் கவனிக்கவில்லை.
ரொம்பக்குறும்பு.

காமராஜ் said...

வாருங்கள் மண்குதிரை. வணக்கம்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

உங்களின் முதல் வருகைக்கு
வணக்கமும் நன்றியும் நிலாமதி.
ஊக்கமாக இருக்கிறது.,

ஆ.ஞானசேகரன் said...

நல்ல எழுத்து நடை

Unknown said...

good nalla pathivu

காமராஜ் said...

வாருங்கள் நண்பா ஞானசேகரன்.
வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் சிதம்பரராஜன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சந்தனமுல்லை said...

:( ஹ்ம்ம்..

அன்புடன் அருணா said...

:((