10.1.16

யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914


அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது.  விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போனவர்கள்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அயோத்திதாசர் எல்லா வழிகளிலும் உழைப்பை முன்னிறுத்தினார். அதுவே தனது இயக்கத்தின் மிகமுக்கியமான புள்ளியாகவும் கருதினார்.மேட்டிமைச் சாதிகள் உடல் உழைப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒருபோதும் உழைக்கத்தயாரக இருந்ததில்லை. ஆதலால் உழைப்பை அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். எனவே அயோத்திதாசர் தனது ஆதிவேதம் என்கிற நூலில், உழைப்பிலிருந்து வந்ததுதான் சிந்தனை, உழைப்பிலிருந்து வந்ததுதான் கண்டுபிடிப்புகள் என்பதையும் உழைப்பிலிருந்து வந்ததுதான் கலாச்சாரங்கள் எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான வாழ்வியல் ஆதாரங்களியும் முன்வைத்தார்.

அயோத்திதாசரின் இந்த ஓயாத பரப்புரைதான் தமிழ்ச்சூழலில் தனித்தமிழ்,சாதியற்ற தமிழகம்,உழைப்பாளர்களை போற்றுகிற சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது.

நன்றி அயோத்திதாசர் வலைத்தளம், மற்றும் முத்துமோகன்


1 comment:

ராசராசசோழன் said...

நல்ல பதிவு...அயோத்தி தாசரை பற்றி சமீபத்தில் அண்ணன் சீமான் பேச்சினில் இருந்து தெரிந்து கொண்ட எனக்கு உங்கள் பதிவு கூடுதல் தகவலாக இருந்தது.