10.1.16

யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914


அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது.  விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போனவர்கள்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அயோத்திதாசர் எல்லா வழிகளிலும் உழைப்பை முன்னிறுத்தினார். அதுவே தனது இயக்கத்தின் மிகமுக்கியமான புள்ளியாகவும் கருதினார்.மேட்டிமைச் சாதிகள் உடல் உழைப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒருபோதும் உழைக்கத்தயாரக இருந்ததில்லை. ஆதலால் உழைப்பை அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். எனவே அயோத்திதாசர் தனது ஆதிவேதம் என்கிற நூலில், உழைப்பிலிருந்து வந்ததுதான் சிந்தனை, உழைப்பிலிருந்து வந்ததுதான் கண்டுபிடிப்புகள் என்பதையும் உழைப்பிலிருந்து வந்ததுதான் கலாச்சாரங்கள் எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான வாழ்வியல் ஆதாரங்களியும் முன்வைத்தார்.

அயோத்திதாசரின் இந்த ஓயாத பரப்புரைதான் தமிழ்ச்சூழலில் தனித்தமிழ்,சாதியற்ற தமிழகம்,உழைப்பாளர்களை போற்றுகிற சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது.

நன்றி அயோத்திதாசர் வலைத்தளம், மற்றும் முத்துமோகன்


6.1.16

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

வடக்கே போ,மேற்கே போ,தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.
எதற்கம்மா என்ன தீமை இருக்கிறது எனக்கேட்பான்
தீமைகள் இல்லையப்பா பூச்சாண்டி இருக்கிறான் என்பாள்.

இல்லையம்மா கிழக்கே தான் என் நண்பன் இருக்கிறான்
இல்லையம்மா கிழக்கே தான் நம் வயல் இருக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் சூரியன் உதிக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் நம் பசுமாடு மேய்கிறது

சொன்னாக்கேளு எதுத்துபேசினால் சூடு வைத்துவிடுவேன்
வடக்கே போ மேற்கே போ தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.




3.1.16

சமம்




சமம் என்பது துரதிஷ்டவசமானது.
சமம் என்ற சொல்லுக்கு இணையான
அல்லது மாற்றுச்சொல் காணக்கிடைக்கவில்லை.
சமம் என்பது அதே போல் அல்லது
அதற்கு இணையான என்று பொருள் கொள்ளலாம்.
இணையான என்பதை அளவை,தொகை,எண்ணிக்கை,
மதிப்பு,தரம்,பட்டம் என்ற மதிப்பீடுகளில் ஒப்பிடலாம்.
இந்த மதிப்பீடுகள் பௌதீக மற்றும் கணித இலக்கணங்களுக்கு வேண்டுமானால் துள்ளியப்படலாம் இந்த மதிப்பீடுகளை
மனித உயிர்களுக்கு ஒரு போதும் இலக்கணப்படுத்தமுடியாது.