5.10.11

வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’


சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலசுக்கு சென்ற மாதம் போயிருந்த போது சுற்றிச் சுற்றி புத்தகங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்த ஒரு நண்பனின் வீட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது.புத்தக அலமாரிகளுக்கு மத்தியிதான் அண்ணன் ராஜசுந்தர ராஜனும், விதூஷ்வித்யாவும், பத்மாவும், மேவியும் சகோதரர் கார்த்திகப்பாண்டியனும் இருந்தார்கள்அவர்களோடு பேசிக்கொண்டே புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன்.என்னை இறக்கிவிடவந்த எனது மூத்த மகன் கிஷோர்பாரதிக்கு அங்குதான் எடிட்டிங் குறித்த புத்தகம் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதை அவன் புரட்டிக்கூடப் பார்த்திருக்காமல் இருக்கலாம்.அல்லது படித்திருக்கலாம். ஆனால் அது காலங்காலத்துக்கும் அவனோடு கூட இருக்கும். ஒரு தகப்பனாக நான் அவனுக்கு வாங்கிக்கொடுத்த சில அறிவற்றுள் அதுவும் இடம் பிடிக்கும்.தன்னை யாராவது படிக்கமாட்டார்களா என்கிற ஏக்கத்துடன் அது அவனோடு கூடவே இருக்கும்.

அப்படி ஏக்கத்தோடு டிஸ்கவரி புக்பேலசின் அலமாரிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காத்துக்கிடந்தன.நான் பேச்சை தவிர்த்துவிட்டு புத்தகங்களுடன் பேசப்போனேன்.அப்போது தோழர் எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய புத்தகங்கள் கிடந்தன. அது தோழர் கீரணூர்ஜாகீர்ராஜாவின் புத்தகங்கள்.எண்பதுகளில் யதேச்சையாக ஒரு பழய்ய கணையாழியில் படித்த நாகூர் ரூமியின் குட்டிவாப்பா என்கிற சிறுகதை என்னை நெடுநாள் அழைக் கழித்த கதை.ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த விவகாரங்களை மனிதர்களின் நடை உடைபாவனையோடு கலந்து பிசைந்து வைக்கிற அந்த மாதிரியான எழுத்து குட்டிவாப்பா கதையில் கிடந்தது.வயதுதளர்ந்த ஒரு மனிதனை அவனது மூலநோயோடு கூடிய சுவாரஸ்யங்களை அசைபோட்டபடி அவரை நினைவு கூறும் அந்தக்கதை.அதன்பிறகு தான் தோப்பில் முகம்மது மீரானின் அன்புக்கு முதுமையில்லை தொடங்கி ஒன்றிரண்டை வாசிக்கிற ஈர்ப்புவந்தது. அதற் கடுத்து அந்தமக்களின் வாழ்க்கை குறித்து வருகிற எழுத்துக்களை திறம் படச்சொல்லுகிற சமகால எழுத்து தோழர் ஜாகீர்ராஜாவுடையது.

அவர்தான் காபிர்களின் கதைகள் என்கிற பதினெட்டுக்கதைகளை தொகுத்து ஆழி பப்ளிஷர் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்றி ரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது. அதற்கந்த ராமநாத புரத்து தனிமைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

மஹாகவி சுபரமண்ய பாரதிதொடங்கி அண்ணன் சோ.தர்மன் வரையிலான ஆளுமைகளின் கதைகள்.இந்தப்பதினெட்டுப்பேரும் தங்களின் குறுக்கே வந்த இஸ்லாமியர்கள் பற்றிக்கதை சொல்லியிருக்கிறார்கள். பதினெட்டுப்பேர்களில் எனக்குப்பிடித்த வண்ணநிலவனோடுதான் அதை ஆரம்பித்தேன். ’மெஹ்ருண்ணிஷா ’ ஒரு வாழ்ந்துகெட்ட பெரும் பணக்கார முஸ்லீம் வீட்டின் ஒட்டடை படிந்த சுவர்களுக்குள் பயணமாகிற கதை.அப்படியான வாழ்ந்துகெட்ட கதைகளில் எல்லாமே ஒரு வேலைக்காரர் கட்டாயம் கிடப்பார்.அவர்தான் உடைந்து நொறுங்கிப்போன மனிதாபி மானத்தை எடுத்து அவனது சேவகம் என்கிற அன்பினால் மறுபடி புணரமைப்பார். அப்படிப் புணரமைக்கிற ராமையாவை எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

அவரோடும் அந்தகதையின் நாயகி மெஹ்ருண்ணிஷாவோடும்,அந்த வீட்டு சமயற்காரி ஆயிஷாவோடும் நாம் அந்த வீட்டுக்குள் பிரவேசிக்கலாம். ஊராருக்குத்தெரியாமல் அந்த வீட்டு ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம். தனக்கு குழந்தையிலாததால்  கணவனுக்கு இன்னொருத்தியை கைபிடித்துக் கொடுத்துவிட்டு அவளது அப்பா போட்டோவோடும் அவர்கொடுத்த வயலினோடும் அதுகசிகிற இசையோடும் அந்த வீட்டுக்குள்ளே தன்னை தானாகவே அடக்கம் செய்துக்கொள்ளும் மெஹ்ருண்ணிஷா. அவளை அறிய நாம் வண்ணநிலவனின் கையை மட்டும்தான் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும். பெண்விடுதலை,மேல்கீழ் முரண்பாட்டை தகர்ப்பது போன்ற வற்றுக்கு வக்காலத்து வாங்காமலும்,இருக்கிற பண்ணை யடிமைத்தனத்துக்கு வால்பிடிக்காமலும் உள்ளபடியான நடப்பை  உருக உருகச் சொல்லுகிற வண்ணநிலவணின் மெஹ்ருண்ணிஷா இந்ததொகுப்பில் ஏழாவது கதையாக வரும்.

அப்புறம் தோழர் நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’

2 comments:

vasu balaji said...

இரண்டுமே எனக்கும் பிடித்த கதைகள்.

பத்மா said...

padicha ippadithaan pathivu podanum ..naanum irukene somberi ..superb kamaraj sir