25.3.12

ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி



விரட்டி விரட்டியடித்தாலும்
ஆளில்லா நேரம் பார்த்து
கூசாமல் வீடு நுழைகிறது
ரோசமில்லாத சாம்பக் குருவி.

அலகில் ஏந்தி வந்து போட்ட
ஐந்தாவது குச்சியையும்
ஒரு வீட்டை உடைக்கிற
வேதனையோடு வெளியே எறிந்தாச்சு.

ஆனாலும் அடம்பிடிக்கிறது
ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி
வராண்டாவில் தொங்கும்
மின்விசிறியில் கூடுகட்ட.

4 comments:

vasu balaji said...

அருமை.

Rathnavel Natarajan said...

அருமை.
என்ன கோபம்?

காமராஜ் said...

நன்றி பாலாண்ணா....

காமராஜ் said...

நன்றி ரத்னவேல் ஐயா...