21.7.10

பிஞ்சிலே பழுத்தால்


பதின்மூன்று வயதில்
கார் பந்தயத்தில்
ஜெயித்த சிறுவனைச்சுற்றி
வெளிச்சமும் மின்னல்களும்.


ஏழு வயதில்
தினம் இருபது கட்டு
தீப்பெட்டி ஒட்டும்
சிறுவர் எல்லாம்
இன்னும் இருட்டுக்குள்.


கரிகாலன் அனாதையானால்
இளவயது அரசன்.
கருப்பசாமி அனாதையானால்
இளவயது பொறுக்கி.

26 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

//கரிகாலன் அனாதையானால்
இளவயது அரசன்.
கருப்பசாமி அனாதையானால்
இளவயது பொறுக்கி. ////

ம்ம்ம்....

ஆடுமாடு said...

உண்மைதான். நிலைமை அப்படிதான இருக்கு.

தமிழ் உதயம் said...

சிறிய கவிதை. மிக ஆழமான விஷயத்தை சொல்லி உள்ளது. சாதனை என்று பார்த்தால் எல்லாமே சாதனை தான். ஆனால் வாழும் சூழல் தூக்கி வைக்கிறது. தூக்கி போட்டு மிதிக்கவும் செய்கிறது.

Deepa said...

படமும் கவிதையும் அருமை!
கடைசி வரிகள் மனதில் அறைகின்றன.

vasu balaji said...

ஆமாம். :(

க.பாலாசி said...

இது அழிக்கமுடியாத நிலை...

பத்மா said...

நச்ன்னு இருக்குங்க ...என்ன செய்வது ?

அம்பிகா said...

//கரிகாலன் அனாதையானால்
இளவயது அரசன்.
கருப்பசாமி அனாதையானால்
இளவயது பொறுக்கி. //
:-)))

VELU.G said...

//கரிகாலன் அனாதையானால்
இளவயது அரசன்.
கருப்பசாமி அனாதையானால்
இளவயது பொறுக்கி. ////

உண்மையான நிலை

க ரா said...

(:

அன்புடன் அருணா said...

கடவுள் ரொம்ப ஓரவஞ்சனைக்காரர்!

சிநேகிதன் அக்பர் said...

என்னத்த‌ சொல்ல...

சூழ்நிலை.

காலம் காலமாக இதுவே தொடர்கிறது.

செ.சரவணக்குமார் said...

உண்மை.

ஹேமா said...

ம்ம்...நிலையை மாற்றத்தான் யாருமில்லை !

நேசமித்ரன் said...

சுடும் வரிகள் காமு சார்

hariharan said...

தோழரே, ஹசன் மாண்ட்டோ வின் படைப்புகள் என்கிற புத்தகம் எங்கு கிடைக்கும்.

சீமான்கனி said...

நெருப்பு அழிவு நிஜம்தான் இடம், பொருள்......

சிறப்பான கவிதை நன்றி அண்ணே...

ராம்ஜி_யாஹூ said...

அருமை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை

பனித்துளி சங்கர் said...

புகைப்படமும் . உங்களின் சிந்தனையும் மெய்சிலிர்க்க வைக்கிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை.......வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

இந்த கவிதை உடன்பாடாகவில்லையே காமு. திறமையையும், வறுமையையும் முடிச்சிப் போடணுமா என்ன?

காமராஜ் said...

அன்பின் தோழர்கள்..,

ஆரூரான்,
ஆடுமடு,
தமிழ் உதயம்,
தீபா,
பாலாண்ணா,
பாலாஜி,
பத்மா,
அம்பிகா,
வேலு,
கண்ணன்,
அருணா,
அக்பர்,
சரவணன்,
ஹேமா,
நேசன்,
ஹரிகரன்,
ராம்ஜி,
சங்கர்,
குரு,
பாரா..

எலோருக்கு அன்பும் ,வணக்கமும்.

காமராஜ் said...

எலோருக்கு அன்பும் ,வணக்கமும்.

வணக்கம் தோழர் ஹரிகரன்.

நிழல் பதிப்பகத்தார் சமீபத்தில்
மறு பதிப்பு செய்தார்கள்.தமுஎச
மாநில மாநாட்டில் எல்லோருக்கும்
கொடுத்தார்கள்.
சென்னையில் தோழர் சைதைஜேயிடம் இருக்கலாம்.
பாரதி புத்தகலாயத்திலும்.

காமராஜ் said...

அன்பின் பாரா

இது பதிலும் விளக்கமும் இல்லை.

திறமைக்கான படி பயிற்சி என்பதில்
கருத்துவேறுபாடு இருக்காது.
அந்தப் பயிற்சி கார் சாதனையாளனுக்கு
பெற்றோரின் உந்துதலால் வாய்ப்பதும்.
இளம் உழைப்பாளிகளுக்கு வறுமையின் நிர்ப்பந்தத்தால்
வருவதும் கவனம் பெறக்கூடியது.
இரண்டு தரப்பிலும் கைவரப்பெற்ற நுணுக்கம்
ஒரே அளவீடுதானே ?.

கார் கம்பெனி பந்தயம் அறிவிக்கும்
தீப்பெட்டிக்கம்பெனி அப்படியில்லை.

0

சரி இது ச்சும்மா தானே மக்கா ?
பா ரா வுக்கு நான் சொல்லனுமாக்கும் ?

காமராஜ் said...

தோழர் ஹரிகரன்....


பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை
தேனாம்பேட்டை சென்னை 18.

044-24332424

0

நிழல்

31/48 ராணி அண்ணா நகர்
கே கே நகர்
சென்னை 78

nizhal_2001@yahoo.co.in

hariharan said...

மிக்க நன்றி தோழரே, இந்தப் புத்தகத்தை தோழர்.ரமேஷ்பாபு தன்னுடைய வலைப்பூவில் அறிமுகம் செய்திருந்தார், அதனாலேயெ அதை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. உங்களுடைய பதிவிலும் சொல்லியிருந்தீர்கள்.