6.10.11

நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’



( வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’ )


எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் இதுதானென்றும் சொல்லாமல்.ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த பிரியத்தை மட்டுமே நம்பி இந்தக்கதையை நகர்த்தியிருப்பது தான் அதன் வசீகரம். கதை ஆரம்பிக்கும்போது இது கதையா நினைவு கூறலா என்கிற முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கான் என்று முடிகிற பேர்களாகப்பட்டியலிடுவது இப்படி குறுக்குமறுக்காக நம்மை அலையவிட்டு அப்புறம் மும்பைக்கு கூட்டிக்கொண்டு போகிறார் நாஞ்சில் நாடன். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீடே ஊராகும்.ஊரை விட்டு தனித்து விடுதியில் இருக்கும் எல்லோருக்கும் அந்த ஊரே வீடாகும்.

தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு  சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று வழிநெடுக நினைவுகளை நட்டுக்கொண்டு போய் ஒரு தோல்பையில் முடிகிறது கதை. பிரியமான மானிதர்களை நினைவுபடுத்துகிற எல்லாமே பிரியமானதாகவும் பொக்கிஷமாகவும் மாறும். அப்படி ஒரு தோல்பையை மாற்றிக் கையில் கொடுக்கிற சிறுகதையை படிக்கும் எல்லோரும் தங்களை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் . முடிந்தால் அப்படியொரு கதையை எழுதவேண்டும் என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணும் கதை ’கான்சாஹிப்’.

5 comments:

Unknown said...

கதை தான எழுதிருவோம்

காமராஜ் said...

நன்றி சதீஷ்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

கிச்சான் said...

நன்றாக இருக்கிறது அண்ணா!
அன்புடன் கிச்சான்!

சமயவேல் said...

Happy to see human story lovers.Nanjilnadan and Vannanilavan are great writers of our time.Lot to learn from them.