2.12.11

மாற்றத்தைத் தடுக்கும் அரண்


எகிப்து தொடங்கி
வால்தெரு வரை
பற்றிப் படர்ந்த தீ,
என்தேசத்துக்குள்
நுழையவில்லை.
ஏனெனில்
அது மூன்று பக்கம்
ஜாதியாலும்
ஒரு பக்கம்
மதத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது.

14 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
தீபகற்பத்திற்கான புதிய படிமம் அசத்தல்
அழகான வித்தியாசமான சிந்தனை தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

சி.பி.செந்தில்குமார் said...

>>மூன்று பக்கம்
ஜாதியாலும்
ஒரு பக்கம்
மதத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது.

குட் ஒன்

அகல்விளக்கு said...

simple and strong line...

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள்..

உண்மை இதுவல்லவா..!!

vasu balaji said...

உச்சி மண்டையில நச்:)

Unknown said...

பட்டாசு ...

கிச்சான் said...

கிரேட் !!
அண்ணா!







அன்புடன் கிச்சான்

இரசிகை said...

nachchunnu kottu vachchathu pola irukku...

K.s.s.Rajh said...

அருமை அருமை சிறப்பான கவிவரிகள்

hariharan said...

தீபகற்பத்திற்கான புது விளக்கம்!!!

சாதி, மதம் ,இனம் , மொழி மட்டுமா? பிரச்சனை ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் பிரச்ச்னையும் முர”ண்பாடும் வருகிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை மேல்மத்தியதர வர்க்கம் ஆதரிக்கிறது, வியாபாரிகள் சிறுகடைக் காரரகள் சாமான்ய மக்கள் எதிர்க்கிறார்கள்.

அரசு ஊழியரை `அரசு` பழிவாங்கினால் சாமானியன் சிரிக்கிறான், சாமான்யன் போராடினால் அடிப்பதற்கு காவல்துறைக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது. பிரித்தாளுவது வெள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.

ஓலை said...

Sariyaa sonneenga!

Mahi_Granny said...

மாற்ற முடியாத அரண் தான் .superb

venu's pathivukal said...

உங்கள் கவிதையின் கோபம் நியாயமானது...
மிகுந்த கவித்துவத்தோடும், ஆவேசத்தோடும்
அதை நீங்கள் அழகாக முன்வைக்கிறீர்கள்..

ஆனால் நீங்கள் குறிப்பிடும் காரணிகளைவிடவும்
கூடுதலான அம்சங்கள் உண்டு
இந்தியாவில் தாராளமய கொள்கைகளுக்கு எதிராக
மக்கள் கிளர்ச்சி வெடிக்காதிருப்பதற்கு..

பெரும்பகுதி நடுத்தரவர்க்கம்
உலகமயத்தின் சில சாதகமான விஷயங்களைச்
சுவைத்துத் திளைத்திருக்கிறது..

தாராளமயம் மனிதர்களை ஒற்றை ஒற்றை ஜீவிகளாகப்
பிரித்துவிட்டது என்கிறார் பிரபாத் பட்நாயக்.

அநியாயத்திற்குத் தன்னுணர்வோடும் சக மனிதன் கஷ்டம்
அறியப் பிடிக்காதவர்களாகவும் நாம்
மாறிக் கொண்டிருக்கிறோம்..

சாதி, இன, மத வேறுபாடுகளோடு
மாநில எல்லைகள், ஒன்றிணைக்கும் மொழியற்ற தன்மை,
பரந்துபட்ட அறியாமை, கடுமையான ஏழ்மை,
ஒடுக்குமுறைக்குள்ளான ஒடுக்குமுறை, பெண்ணடிமை...

என உட்கூறுகள் நிறைய இருக்கின்றன தோழா....

விவாதிக்க வேண்டிய அருமையான
தளத்தை உங்கள் கவிதை எடுத்து வைக்கிறது.

எஸ் வி வேணுகோபாலன்

ஜோதிஜி said...

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு வாழ்த்துகள்.