25.8.10

வெப்பம் அடைகாக்கும் வீடு.

வெப்பம் குடித்து சினந்த மண்ணில்
மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்.
வருடாந்திரமாகப் புதைந்து கிடந்த
பசுமையின் விதைகள் சீரற்ற
மரகதப் பளிங்கெனப்பாவும் காடு.

எடுத்துக் கொண்ட தானே
மீளப்போர்த்தும் குளங்களின் அம்மணம்.
அங்கிருந்து தவளைகள் நிரப்பும் இசை இரவு.
வேலிப்புதருக்கும் வெட்டவெளிக்கும்
அலைந்து கதறும் பன்றிக்கூட்டம்.

வெளுத்த துணியிலிருந்து
கிளம்பும் புழுங்கல் சுவாசம்.
கருத்த மேனியெங்கும்
கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை.
கடக்கும் நத்தையும் ஓணானும்
நாயும் நசுங்கும்  நாற்கரச்சாலை.

அப்பாடவெனச்சொல்லி
ஓய்வெடுக்கும் குளிர்பதனப்பெட்டி.
அணைத்திலும் ஊடுறுவித்
தகிப்பை விரட்டும் அடைமழை.
விரட்டப்பட்ட வெப்பம்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்.

0
மீள்பதிவு

14 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை, நன்றிகள்

Jey said...

enakku kavitha purivathillai. voted...:)

Unknown said...

அடி மழையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறேன் ...

vasu balaji said...

//தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்//

மனதிலும்.:)

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா

vasan said...

வெப்ப‌ம் எப்ப‌வும் க‌விஞ‌னிட‌மிருந்திருக்க‌ளாம்,
ஆனால், இக்க‌விதைக்குள்ளிருப்ப‌து குளுமைதான்.

பவள சங்கரி said...

நல்ல கவிதைங்க. அப்பாடவெனச் சொல்லி...... கொஞ்சம் புரியவில்லை.

சுந்தரா said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு அண்ணா.

VELU.G said...

very nice

செ.சரவணக்குமார் said...

தஞ்சம் புகுந்துகொள்ளும் ஒரு கவிதை அருமையாக இருக்கிறது காமு அண்ணா.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு காமு.

நேற்று ஒரே ஆட்டமா, என்னை விட்டுட்டு? இருங்கடி, இருங்க. வந்து வச்சுக்கிறேன். :-))

சீமான்கனி said...

தஞ்சம்புகுந்த கவிதை நெஞ்சம்புகுந்தது அண்ணே...அருமை வாழ்த்துகள்...

ஹேமா said...

தலையங்கமே கவிதையாய் குளிர்ச்சியாய் இருக்கு.

நந்தாகுமாரன் said...

almost a poem i liked in the first read