30.9.11

பிரிவினைப் பணிமனை ( கருத்தக் கவிதைகள் )




ப்ரைனாவின் அம்மா அழுதுகொண்டிருக்கிறாள்
பள்ளியிலிருந்து வீடுதிரும்பிய செல்லம்
தேம்பலோடு சோகம் கொண்டுவந்தாள்.

அவளது வகுப்பில் இரண்டு ப்ரைனாக்கள் உண்டாம்
ஆதலால் இவளைக் ’கருப்பு ப்ரைனா’ என
அழைப்பதன் மூலம் இனம் கண்டார்களாம்.

இனிமேலும்நான் கருப்பு ப்ரைனாவாக
இருக்கமாட்டேன் அடம்பிடித்தவளுக்காக.
ஏதும்செய்ய இயலாத அம்மாவும்
ஏசுவே நான் என்ன செய்வேன் என்று
நொந்துகொண்டு அழுதாள்

அப்புறம் அவளது பொம்மைகளையும்
கொஞ்சம் கருப்புக் கதைகளையும் தந்தேன்.
அவளுக்கு நான் வேறென்ன சொல்லமுடியும்.

ஐந்து வயதாகுமுன்னே குழந்தைகளுக்கு
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது
கருப்பு என்பது நிறமல்லவாம்
அது எமது மக்களின் தோல் தானாம்.

= டாய் டெர்ரிக்கோட்

6 comments:

Rathnavel Natarajan said...

அருமை

இரசிகை said...

:(

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்ல கவிதை இது...

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

அன்புக்கு நன்றி ஐயா.தாங்களும் குடும்பத்தாரும் நலம் வாழ வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

நன்றி ரசிகை

காமராஜ் said...

அன்பின் ராகவன்,
வணக்கம்.
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இடங்கள் ம்மறிக்கொண்டிருக்கிறது ஆனால் நினைவுகள் மட்டும் அழியாமல் அப்படியே உயிர்வாழ்கிறது.

தினம் தினம் பதிவெழுத பொழுதுகிடைத்த போதெல்லாம் சோம்பிக்கிடந்த எனக்கு ராமநாதபுரத்து தனிமை நல்ல தண்டனை.அல்லது பாடம்.

இந்தக்கவிதயைக்கூட இன்னும் அழகுபடுத்திருத்தி எழுதியிருக்கலாம்.

எழுதும்போதே என்ன சொல்லுவாரோ ராகவன் என்றுதான் மனசு அடிக்கிறது.

உங்கள் கமெண்டுக்கு நன்றி

பேச எழுத பகிர காலங்கள் திரும்பும் நம்பிக்கையோடு காமராஜ்.