3.9.09

ஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமானம் காணவில்லை.








ஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமானம் காணவில்லை.-------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாறு இது வரை சந்தித்திராத தேடுதல் வேட்டையோடு ஆந்திர முதல்வர் ys.ராஜசேகரரெட்டி காணாமல் போயிருக்கிறார். சித்தூரிலிருந்து அரசுக்கு சொந்தமான bhell ஹெலிகாப்டரில் பயணமானபோது இடையில் திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மிக மோசமான சீதோஷ்ணநிலையும், அதிக மழைப்பொழிவும் தேடுதல் வேட்டைக்குல் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ராணுவம், துணை ராணுவம், காவல்துறை என மத்திய மற்றும் மாநில படைகள் சுமார் 5000 பேருக்குமேல் நேரடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதும் இந்த நிமிடம் வரை எந்த நல்ல சேதியும் கிடைக்கவில்லை. இது போக சாட்டிலைட், வயர்லெஸ், ஆகிய விஞ்ஞான உபகரணங்களாலும் கூட இன்னும் தடயங்களை காண முடியவில்லை.
இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பகுதியான நல்லமலா பிரதேசத்தை மையங்கொண்டு தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்னதாக இதே போல நடந்த இரண்டு விமானத்தேடுதலில் அரசின் எந்த முயற்சியும் பலனளிக்காமல் கடைசியில் மலைவாசிகளால் மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்பது, வளர்ந்து வரும் விஞ்ஞானத்துக்கு சவாலாக உள்ளது. மாநிலம் முழுக்க சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் ஒரு பக்கம் அணுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகங்கள், ஊகங்கள், பீதியனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர் நலமுடன் திரும்பவேண்டுமென இந்திய சமூகம் விரும்புகிறது.

3 comments:

மண்குதிரை said...

mm sir kelvi patteen

ithu puthusaaththaan irukku

enna nadakkappookuthunnu theriyalai kaththirukkireen

மண்குதிரை said...

Andhra Pradesh CM YSR is dead -Express Buzz

Earn Staying Home said...

மிகவும் வருந்தத் தக்க செய்தி