12.1.09

உதிர, உதிரப்பூக்கும்




வாசலில் தீபம் வரிசையேற்றிக்கொண்டிருந்த, குளிர்மாலைக் கார்த்திகையில் ஒருநாள்.


இரண்டு பெண்கள் வந்தார்கள்.
என்னோடும் என் மனைவியோடும் மிக அன்பானார்கள்.

என்வீடு தீப ஒளியை விட இன்னும் பிரகாசமானது. குடிவந்ததிலிருந்து அர்த்தமற்றுப் பூத்துக்கிடந்தது பூச்செடிகள்.தயங்கித்தயங்கிப் பூப்பறித்தபோது அர்த்தங்கள் மீட்டி ஆடிக்குதித்தன.



அடிக்கடி வந்து, பெண்மக்கள் இல்லாது இருண்ட என்வீட்டை இரவல் அன்பால் ஒளியூட்டினார்கள். வேளையும்சண்டையிட்ட நாளையும் பகிர்ந்து கொண்டார்கள்அன்புத்தொல்லையால். மனைவியின்தனிமையைமடியிலமர்ந்து

பகிர்ந்துகொண்டார்கள்.


எனது வாசலில்,செயற்கைத் தாரகை தொங்கியதுகிறிஸ்து பிறந்த நாளில். எங்களின் உண்மையான மதம் எது. தீராத கேள்விகளோடு திரும்பிப்போனார்கள்.

ஆறு கார்த்திகை கடந்துவிட்டது. அவர்கள் திரும்பி வராத காரணம் அறியாதுஇருண்டு கிடக்கிறது தீபங்களின் சுற்றுப்புறம்.
இதோ செம்பருத்திப் பூக்கேட்டுநீள்கிறது இன்னொரு பூ.

மீண்டும் அர்த்தங்கள் மீட்டி ஆடிக்குதிக்கின்றனபழைய செடிகள்.

No comments: