27.1.09

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்.




ஒரு கேளிக்கை விடுதியில் ஆண்களும் பெண்களுமாக இருந்தனர். 15 முதல் 20 குண்டர்கள் நுழைந்து அங்கிருந்த பெண்கள் அணைவரையும் கொடூரமாகத்தாக்கியிருக்கிறார்கள். இது நடந்தது வேறெந்த நாட்டிலுமில்லை. இந்தியாவில். கர்நாடகத்தின் மங்களூர் நகரில். குடியரசு தினத்தின் முந்திய நாள் இரவில். தாக்கியவர்கள் கர்நாடக அரசு முத்திரை குத்தப்பட்ட குண்டர்கள்.தாக்கப்பட்டவர்கள் முதலில் முஸ்லிம்கள், பின்னர் கிறித்தவர்கள், காலம் காலமாக தலித்துகள், இப்போது பெண்கள்.தங்களின் பலத்தைப் பிரயோகிக்க கட்டாயம் ஒரு நோஞ்சானைக் கண்டுபிடிப்பதில் வெறிகளுக்குள் வித்தியாசமில்லை.

வரலாறு நெடுகிலும் அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் பாசிசத்தின் செயல்பாடுகள் ஒரே மாதியானவை.சுடிதார் அணியக்கூடாது, ஒரே பேருந்தில் சகல மதத்தினரோடு பயணம் செய்யக்கூடாது, மதம் மாறக்கூடாது,ஆண் பெண் சகஜமாகப் பழகக்கூடாது என்னும் கொடூர விதிகள் அமலுக்கு வருவது புதியதல்ல. மிக மிகப் பழையது மனுவின் விதிகள். மதத்தின் பெயர் மாறலாம், நாடு மாறலாம், குணம் மாறாது.

நாடுகளுக்கு நடுவில் இருக்கும் எல்லைக்கோடுகள் கூட இளகிப்போகிற இந்த நாட்களில் தெருக்களின் நடுவில் எல்லைக்கோடுகள் உயருகிறது.

1 comment:

hariharan said...

அருமையான பதிவு.

நான் சில நண்பர்களிடம் மங்களூர் சம்பவம் குறித்து பேசியபோது துரதிஷ்டவசமாக இந்திய “தலிபானி”ன் செயல்களை ஆதரிக்கிறார்கள்.