13.3.10

புரிதல்

இரு சக்கர வாகனத்தில் இருந்து இடறி விழுந்துவிட்டார்.காலில் பலத்த காயம். கூட்டம் கூடிவிட்டது. காயத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது.நடக்க இயலாமல் இருந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான யோசனைகள் நடந்தது. மருத்துவமனைப் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டது. அந்த மருத்துவமனைதான் பக்கத்தில் இருக்கிறது போகலாம் என்று முடிவானதும். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டபடி மயங்கிப்போனார்.

கண்விழித்தவுடன் 'என்ன இங்க கொண்டுவந்தது யாருன்னு' கேட்டார்.கொண்டுவந்தவர் சங்கோஜத்தோடு அவர் வாழ்த்து மாலையை ஏற்கவந்தார். 'இன்னு ஒரு நிமிசம் எம்முன்ன நின்ன ஒன்ன கொன்னுருவன் ஓடிப்போ' என்று விரட்டினார்.ஆளாளுக்கு என்னவென்று கேட்டார்கள்.

 ''......''.மருத்துவமனைக்கு கொண்டுபோகாமல் காப்பாற்றுங்கள் என்று சொன்னதையும் மீறி அதே மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்ததை அந்த மருத்துவர் முன்னிலையிலே எப்படிச்சொல்லுவார்.

6 comments:

ஈரோடு கதிர் said...

ஆஹா...

அதுவும் சரிதான்...

ராம்ஜி_யாஹூ said...

oh nice, twist

சந்தனமுல்லை said...

:-) அடக்கொடுமையே!!

vasan said...

That Hospital would be the Biggest in our country with more branches. The founder might have recd the Highest Award. It might be a Ramana Movie style Hospital

Vidhoosh said...

:)) nice

அன்புடன் அருணா said...

அய்யோடா!