18.3.10

உலகச் சிறுகதைகள் SENORS PAYROLL = வில்லியம்.இ.பார்ரட்

உலகச்சிறுகதைகள் பட்டியலில் இருக்கும் ஒரு குறுஞ் சிறுகதை.பார்ரட் (1900-1986)  ஒரு அமெரிக்க எழுத்தாளர் நூற்றுக் கணக்கான படைப்புகளை கொடுத்த அவரது பல கதைகள் ஹாலிவுட்டுக்கு சினிமாவைத் தந்திருக்கிறது. 'கடவுளின் இடது கை' அவரது பிரபலமான கதையும்,திரைப்படமுமாகும்.வாசிக்க எளிதானதும் பதிவிட வசதியானதுமான இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

0

லாரியும் நானும் அந்த எரிவாயு நிறுவணத்தின் இளம் பொரியாளார்கள்.அப்படியென்றால் நாங்கள் இருவரும் எழுத்தர்கள் என்று அர்த்தம்.எழுத்து வடிவத்திலான எல்லா தலைமையக ஆணைகளும் எதிரெதிரே உட்கார்ந்திருக்கும் எங்கள் இருவரின் மேஜைக்குத்தான் வரும்.கத்தை கத்தையாக வரும் அலுவலக உத்தரவுகளைச் செயல்படுத்துவதுதான் எங்கள் வேலை.

இளம் பொறியாளர்களை மெக்சிகன் தொழிலாளிகளைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது. நாங்கள் அவர்களுக்கு மட்டும் சம்பளம் தரும் முதலாளிகளாகத் தெரிந்தோம். அவர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்களில் கைதேர்ந்தவர்கள் கொதிக்கிற சுரங்கத்தில் எட்டுமணி நேரம் ஓய்வில்லாமல் ஓடுகிற எந்திரமாக மாரிப் போவார்கள்.நான்குபேர் துக்குகின்ற பழுவை ஒரே ஆள் தூக்குகிற கையும் புஜமும் கொண்டவர்கள். நிலக்கரியை பெரிய கூடைகளில் அள்ளி வெளியே தட்டுகிற வேலை அவர்களுக்கு.குறுகிய சுரங்கங்களின் வெப்பத்துக்குள்ளிருந்து அவர்கள் தட்டுகிற நிலக்கரி தரைக்குள்ளிருந்து கருப்புத்தண்ணீர் பீறிட்டுக் கிளம்புவது போல வந்து விழும்.

ஒவ்வொரு ஐந்தாம் தேதியும் இருபதாம் தேதியுமாக இரண்டு முறை அவர்களுக்கு சம்பளம் வழங்கியது நிறுவணம்.ஆனால் அவர்கள் மூன்று நாளில் தீர்த்துவிட்டுத் திண்டாடுவர்கள்.மீதிப் பதினைந்து நாளை பணமில்லாமல் சந்திக்க முடியாதாகையால்.மூன்று நாட்களுக்கொரு முறை சம்பளம் வழங்கினோம்.அதை முன்தொகையாகக் கணக்கிட்டு அதற்கான காசோலை மாற்றுவது எங்கள் வேலை.ஒரு நாள் மேலிடம் இனிமேல் எந்த ஊழியருக்கும் முனபணம் வழங்கக்கூடாது,சில அத்தியாவசிய அல்லது மருத்துவச்செலவுகளுக்காக மட்டும் வழங்கலாம்மென்று உத்தரவிட்டது.

மறுநாள் வந்த ஜுவான் கார்சியாவிடம் சொன்னபோது  அவர் அத்தியாவசியம் என்றால் என்ன என்று கேட்டார் நான் விளக்கினேன்.அப்போ இன்னைக்கு பணம் கிடையாதா என்று கேட்டார் அடுத்த இருபதுதான் என்றேன். அடுத்த இரண்டு மணிநேரத்தில் இதேபோல பலர் வந்து திரும்பிப் போனார்கள்.மறுநாள் ஜுவான் கார்சியாவின் மனைவி சாகக்கிடந்தாள்,மெந்தான்சாவின் அம்மாவுக்கு இறுதிநாள்,பல குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு இப்படியான மருத்துவச்செய்திகளாக எங்கள் மேஜைக்கு வந்தது. அவற்றை எல்லாம் அத்தியாவசிய முத்திரை இட்டு  பணம் வழங்கினோம்.

அடுத்த சில நாட்களில் இனிமேல் 5,20 தேதிகளைத்தவிர பணம் வழங்கப்படமாட்டாது.வேலையிலிருந்து வெளியேறுபவர்களுக்கு கணக்குப்பார்த்து பணம் வழங்கப்படும் என்று உத்தரவு வந்தது.வழக்கம் போல வந்த ஜுவான் கார்சியாவுக்குச் சொன்னோம்.சோர்வோடு திரும்பிப் பின் மறுநாள் வந்து சரி நான் வேலையை விட்டுவிடுகிறேன் என்று சொன்னான். நாங்கள் நிறுவணத்தின் மகிமைகளை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் காதில் வாங்காமல் பணத்தை எண்ணிக்கையில் வாங்கினான்.ஜுவான்,அயல்யா,மெந்தான்சா,கொன்சாலா,மற்றும் ஓர்ட்டெஸ் டென்னும் ஈடுகட்ட முடியாத உழைப்பாளிகள் நிறுவணத்தைவிட்டு ஒரேயடியாக வெளியேறினார்கள்.

அடுத்த நாள் புதிய ஒப்பந்த தொழிலாளிகளை தேர்வுசெய்யக் காத்திருந்தோம். யாரும் வரவில்லை இருதியில் ஜுவான்,அயல்யா...எல்லோரும் வரிசையில் இருந்தார்கள் வேறு வழியில்லை எடுத்துக்கொண்டோ ம்.
ஒவ்வொரு நாளும் வேலையில் சேர்வது அன்று வேலையை விட்டு விலகுவதுமாக ஒரு பெரும் சுமையான வேலைசெய்தோம்.ஒரு நாள் மேலிடம் " வேலியிலிருந்து வெளியேறுகிற யாரும் முப்பது நாட்கள் வரை மீண்டும் சேர இயலாது என்கிற உத்தரவு வந்தது.லாரி சீட்டியடித்துக்கொண்டு சொன்னான்."இந்த முறை அவர்கள் தொலைந்தார்கள் ஒன்னுமே செய்யமுடியது" அன்று மாலை வந்து ஓய்வுக்கடிதம் கொடுக்க வந்த ஜுவான் குழுவினரிடம் இந்த உத்தரவைச்சொன்னோம்.சற்றும் யோசிக்காமல் இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொன்னார். எங்கள் கல்வியின் அறிவையெல்லாம் செலவழித்து அவர்களிடம் தோற்றுப்போனோம். இனி என்ன செய்வதென அறியாமல் அந்த இரவை ஆழ்ந்த சிந்தனையோடு கழித்தோம்.

மறுநாள் காலையில் அவகள் வந்தார்கள் "மன்னிச்சிருங்க ஜுவான் ஒன்னுமே செய்ய முடியாது ரூல்ஸ் கடுமையாக இருக்கு என்றோம்." மன்னிக்கனும் திருத்திக்கொள்ளுங்கள் அதிகாரிஅவர்களே என் பெயர் ஜுவான் அல்ல மனுவேல் ஹர்னாண்டஸ் என்று சொன்னான்.அதைத்தொடர்ந்து அவர்களது குழுவுக்கும் நிறைய்ய வேறு பெயர்கள் இருந்தது.ஒன்றும் செய்ய இயலாமல் சேர்த்துக்கொண்டோ ம்.

அன்றே நேரில்போய்  எங்கள் முதன்மை அதிகாரிக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னோம். நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அங்கிருந்து ஒரு உத்தரவோடு வந்தோம்.எங்கள் மதிப்பிற்குரிய உழைப்பாளர்களை அழைத்தோம். இனிமேல் எந்த விதியும் இல்லை நாம் பழைய படியே பழைய பெயரிலே தொடரலாம் என்று சொன்னேன்.

இப்போது தான் முதல் முறையாக உத்தரவை எழுத்துக் கூட்டிப் படித்தார்கள்.

4 comments:

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு!

பா.ராஜாராம் said...

நல்ல சிறுகதை.பகிரலுக்கு நன்றி காமராஜ்!

ஆடுமாடு said...

நல்ல கதை. ஆனால், அவர்களின் காலச மற்றும் சமூகச் சூழலுக்கேற்ப படித்தால் இன்னும் அழுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துகள்.

காமராஜ் said...

நன்றி

அருணா,
பாரா,
தோழர்.