11.4.09

கங்கை பார்க்கப்போனேன்.








டெல்லியிலிருந்து ரிஷிகேசுக்கு பேருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அவர் எங்களோடு நெருக்கமானார். ஒருவருக்கொருவர் திண்பண்டங்கள் பரிமாறும் சினேகிதர்களானோம். ஓங்கு தாங்கான உருவமும் முதிர்ச்சியுமான அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும் என நினைத்தோம். ஆனால் வயது இருபத்து நான்கு எனச் சொன்னதும் வியப்பு அடங்கவில்லை. இரவு முழுவதும் பஞ்சாப், உத்திரப்பிரதேச, உத்ரகாண்ட் பிரதேசங்களில் பயணம். நைனிடால், பனாரஸ், டேராடூன் போன்ற பிரபல ஊர்கள் உறக்கத்திலே கடந்து போனது. விலை உயர்ந்த புகைப்படக் கருவியும், வீடியோகருவியும் வைத்திருந்த அவர், இமயமலையின் புல், பூண்டுகளைக்கூட விடாமல் பதிவுசெய்துகொண்டு வந்தார். ரிஷிகேசில் பல வண்ணங்களில் கிடந்த கூழாங்கற்களை சின்னப்பையனைப்போல அள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டார். அரசுடைமை வங்கியின் அலுவலரும் பணியாளர்களுமான நாங்கள் நால்வரும் அவரை வேடிக்கை பார்க்க மட்டும்தான் முடிந்தது. இத்தாலியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு தூரக்கிழக்கு நாடுகளில் சுற்றுப்யணம் செய்ய விடுமுறையும் செலவுக்கு பணமும் அந்த நிறுவணமே கொடுத்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும் வியப்பின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோம்.



இங்கே, ஒரு மாணவனிடம் மாதத்திற்கு ஐயாயிரம் பத்தாயிரம் கல்விக்கட்டணமாக வாங்கும்தனியார் நிறுவணங்களில் அசிரியர்களுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளமாய்த் தரும் கல்வித் தந்தைகள் ஏராளம். எங்கள் பகுதியில் மாதம் ஐநூறு கொடுக்கிற கல்விக் கொடை வள்ளல்களுக்கு மருத்துவர்( டாக்டர்) பட்டமெல்லாம் கூடக்கிடைக்கிறது. சாதனைத்தமிழனாக மூன்று வருடம் தேர்வானவரின் இன்போசிஸ் நிறுவணமும் விருதுநகர் எண்ணெய் உற்பத்தி நிலையங்களும் ஒரே மாதிரிக் கூலியும் தொழிலாளர் கொள்கையும் கடைப்பிடிக்கிறது. தொழில்நுட்பம் படித்து கௌன்சிலிங்கில் தேர்வாகாத கணினி மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ரெண்டாயிரம் தருகிற உலக மகா தொழிலதிபர்கள் இங்கே ஏராளம். அவுட்சோர்சிங் என்கிற புதிய ரகத்தொழிலாளர்களைக் கண்டு பிடித்திருக்கிறது நமது தனியார் மற்றும் அரசு நிறுவணங்கள். தமிழகத்தின் எல்லா ஆலைகளிலும் முப்பதினாயிரம் மொத்தமாகக் கொடுத்துவிட்டு ஐந்து வருடம் கொத்தடிமைகளாகிப்போகிற கிராமத்து விடலைப்பெண்கள். அதற்குப் பெயர் சுமங்கலித் திட்டம். பெருகிக் கிடக்கும் ஜனத்தொகையால் மலிந்துகிடக்கிறது மனித உழைப்பு. பத்துசதவீதம் இந்தியர்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் கிடைக்கிறது. இதுதான் உலக முதலளிகளின் மூலதனம். இந்தச் சுரண்டல்களை புரிந்துகொள்வதுதான் உழைப்பவர்களின் மூலதனம்.

3 comments:

மாதவராஜ் said...

சரியாகச் சொன்னாய்.
கோபமும், வேகமும் எழுத்துக்களில் தெரிகிறது தோழனே!
பாராட்டுக்கள்.

நிகழ்காலத்தில்... said...

\\இமயமலையின் புல், பூண்டுகளைக்கூட விடாமல் பதிவுசெய்துகொண்டு வந்தார். ரிஷிகேசில் பல வண்ணங்களில் கிடந்த கூழாங்கற்களை சின்னப்பையனைப்போல அள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டார்.\\

நமக்கு ஏன் இந்த மனநிலை வாய்ப்பதில்லை?

vimalavidya said...

I am happy see your article kamaraj.The two articles have no relevance and continuity.So many spelling mistakes are there.Kindly could you please correct all these things ?I am expecting more particularly ,in the election time,political issues from all blog holders.
-R.SELVAPRIYAN-CHALKUDY