22.4.09

நெடுநாள் நீங்காத அதிர்வை விட்டுச்சென்ற ஆவணப்படம்








இந்தியாவின் கோடை வாசஸ்தலங்களில் எல்லம் கூட்டம் கூட்டமாக ஸ்வெட்டர் விற்கிறவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம் அவர்களுக்குள் அடர்த்தியான ஒரு சோகம் கவிழ்ந்திருக்கிறது. 1958 ஆம் வருடம் இந்திய அரசு armed force special power act என்கிற சிறப்பு சட்டத்தைக்கொண்டு வந்தது. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் செல்லுபடியாகிற இந்தச் சட்டம் கிட்டத் தட்ட பொடா, தடா சட்டங்களை விட இறுக்கமானது. ஒரு முக்கால் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கிற இந்தச்சட்டம் தேசப் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் அதிகார எல்லை கேள்விகளற்றது. சந்தேகத்தின் பேரில் பிடித்துக்கொண்டு போகிறவர்கள் ஒருபோதும் உருப்படியாக வீடு திரும்புவதில்லை. அதன் கோரப்பல்லில் சிக்கிய மணிப்பூர் அப்பாவி மக்கள் குறிப்பாகப்பெண்கள், அதுவும் இளம்பெண்கள் சந்தித்த இழிவுகளும் சொல்லமுடியதவை. அதை எதிர்த்த ஜனநாயக இயக்கங்கள் நசுக்கப்பட்டன. துடிப்பான இளைஞர்கள் வழக்கம் போல நக்சலைட் முத்திரை குத்தப்பட்டு வதைக்கப்பட்டார்கள். இதற்கெதிரான போராட்டங்கள் சங்கிலித்தொடராக ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போதிலும். ஒரே ஒரு பாரளுமன்றத்தொகுதியைக்கொண்ட அந்த மக்களின் கோரிக்கை சிறப்புக்கவனம் பெறத் தகுதியற்றதாகிவிட்டது. தர்ணாக்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என சூடு பிடிக்க ஆரம்பித்தது சமூக ஆர்வலரும் மணிப்பூர் போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான மனோரமா தேவி கற்பழித்துக் கொல்லப்பட்ட பின்னர்தான். சட்டைப் பட்டனைத்த் திறந்து கொண்டு எந்திரத்துப்பாகிக்கு நெஞ்சைக்கட்டுகிற இளைஞர்கள், சாலை மறியல் நடக்கும்போது படுத்துக்கிடக்கிற இளைஞனின் தலைக்குப்பக்கத்தில் பாய்கிற துப்பாக்கி ரவைகள் என போராட்டத்தின் துணிச்சலைச் சொல்லுகிற ஆவணப்படம் afspa 1958.



பல விருதுகளைவாங்கிய இந்தப்படத்தில் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து 2004 ஜுலை 14 வரை தேதி வாரியாகத் தொக்குக்கப் பட்டிருக்கிறது அதிர வைக்கும் ஆவணம். ஒரு நூறு மாணவர்கள் தங்கள் காலகளில் தீவைத்துக்கொண்டுதெருக்களில் ஓடுகிற தீக்குளிப்பு நெடுங்காலம் திகிலைத்தக்கவைக்கிற நிஜம். பிடிவதமாக இறந்து போகும் மாற்ற் தலைவனின் மரணவாக்கு மூலம் காணச்சகிக்கமுடியாத இறுதிச்சோகம். இன்றுவரை தனது பட்டினிப்போராட்டத்தைத் தொடரும் மாணவி சர்மிளாதேவி உலக இரும்புப் பெண்களின் முன்னணியில் நிற்கிறார். படத்தின் இறுதிப்பதிவு 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் தேதி உலகை உலுக்கிய ஒரு சம்பவத்தோடு உறையும்.



காங்லா மணிப்பூரின் புனிதத்தலங்களில் மிக முக்கியமானது. அஸ்ஸாம் ரைபிலின் 17 வது படையின் தலைமையிடம் அங்குதான் அமைந்திருக்கிறது. அந்த தலைமயகத்தின் மிக நெடிய இருப்புக்கதவுக்கு முன்னாள் இருபது தாய்மர்கள் நடத்தியபோராட்டம் இந்திய வரலாறு சந்திக்காத ஒன்று.
தங்களை நிர்வாணப் படுத்திக்கொண்டு " எங்களை வாழவிடு அல்லது எங்களையும் கற்பழித்துக்கொன்று போடு " என்று கீச்சுக்குரலில் ஒலிக்கிறது தாய்மர்களின் குரல். மணிப்பூரி பாஷை புரியாவிட்டாலும் அதன் கோபம் எல்லோரிலும் அதிர்வை உண்டாக்கும். ' எனது நிறமே எனது கொடியாகும் ' என்கிறது ஒரு கறுப்புக்கவிதை. ' எனது இழிவே எனது ஆயுதமகும் ' என்கிறது இன்னொரு கவிதை. ஓரக்கண்ணால் பார்க்கிற, காலம் காலமாக போகப்பொருளாக கற்பிதப்படுத்தப்பட்ட நிர்வாணத்கைக் கூட ஒரு ஆயுதமாக்குகிற வல்லமை பெண்களால் மட்டுமே சாத்தியாமானது.



அரங்கில் இருந்த ஐநூறு பேர்களில் சலனத்தை தடுத்து நிறுத்திய அதிர்வு ஒரு நீண்ட மௌனத்தை மட்டும் விட்டுச்சென்றது. afspa 1958 ஆவணப்படம். அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஹவோம் பபன்குமார் இன்னும் நிலைமை அப்படியே தான் தொடருகிறது எனச்சொன்னார்.

2 comments:

Suresh said...

மிக அருமையான கருத்துகள் பதிவும்
After reading this post i have become your follower

Please visit my blog if u have time. hope u like it

காமராஜ் said...

வணக்கம் சுரேஷ்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி