Showing posts with label கருப்புக்கவிதை. Show all posts
Showing posts with label கருப்புக்கவிதை. Show all posts

27.12.15

அவனைப் போக விடு


(கருப்புக் கவிதைகள் பக்கத்திலிருந்து
கருப்புக்காதல் வரிசை -
மொழிபெயர்ப்பு முயற்சி.)
..

நாம் சந்தித்துக்கொண்ட முதல்பொழுதிலேயே
உனை முடிவில்லாமல் அறிந்ததாய் உணர்ந்தேன்.
தனித்தினி நான் பயணிப்பதெப்படி நண்பனே ?
பரிமாறிக்கொண்ட ரகஸ்யங்களை விட்டு
தனித்துநான் பயனிப்பதெப்படி நண்பனே ?

சந்தோசங்களை விடவும் சண்டையில் நாம்
பரிமாறிதுதானே அதியற்புத உன்னதங்கள்.
ஆனந்தம்,களியாட்டம்,கண்ணீரென
எல்லாவற்றையும் சேர்ந்தே செலவழித்தோம்.

வாழ்வின் பரியந்தமும் புன்னகை கூடவரும்
யாரும் விரும்பாத நான் உன் அன்புக்கு பாத்திரமானதால்.
உனக்கான என் அன்பை,என்மரியாதையை, இடத்தை
எதற்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது.
என்னில் அடியாழத்தில் இருக்கும் இவற்றால்
ஒருபோதும் உனைப்பிரிய முடியாது.

எனினும், இன்னொரு நான், மிதிபட்டநான்.
என்னால் நீ இழந்தவை போதும்
இது உன்னை ஒரு போதும் காயப்படுத்தக்கூடாது
என்பொருட்டு பேத உலகில் நீ இழந்தவை போதும்.

இருப்பினும் நீயெனக்கு எப்போதும் உன்னதம்.
உவர்ப்பிலும் நானுனக்கு சளிக்காத சந்தோசம்.
அதிமாக நேசித்தால் அருகிலிருந்து நேசிக்காதே
எங்கள் முதுமொழியை நான் முன்மொழிகிறேன்

மறந்துவிடாதே
நினைவுகள் அழியும் வரை
நானும் மறக்கமுடியாது
போய்வா....