பசிக்கிறதென்பதை
பள்ளத்துக்குள் கிடக்கும்
கண்கள் சொல்லும்.
தூரிகையைப்பிடித்த
கைகள் நடுங்கும்.
பெருங்குடலைச்
சிறுகுடல் உரசும்
இடியோசை கேட்கும்
வாய் மட்டும் மூடிக்கிடக்கும்.
அவனிடமிருந்து பறித்தெடுத்த
வார்த்தைகளைச் சேர்த்து வைத்து
வண்ணங்கள் பேசும்
அவன் வரைந்த ஓவியங்கள்
கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டும்.
கூடி நின்று பார்ப்போரிடமிருந்து
அங்கீகாரத்தை இயக்கமே
எடுத்துக்கொள்ளும்
வண்ணங்கள் ஒட்டிய ஓவியக்கை
மனைவியின் சொல்லும் உதவாக்கறை
மண்ணெண்ணை மணக்கும்
தூரிகை போலச்.
சொல்லத் தெரியாமல்
மூலையில் கிடந்து ஏங்கும்.
இருந்தும்..
யாராவது ஒருவர் வந்து
ஓவியம் அழகென்று
உச்சிமுகரும் போது.
எல்லாவலிகளும் தீர்ந்து போகும்.
என் பெயர் ஓவியத்தோழன்
Showing posts with label கவிதைபோலும். Show all posts
Showing posts with label கவிதைபோலும். Show all posts
19.3.10
7.2.10
வீரம் வெளஞ்ச மண்ணு.
கோழிகளுக்கு பஞ்சாரம்,
ஆடுகளுக்கு கூடாரம்,
மாடுகளுக்கு ஒருகம்பும் கயிறும்.
பாட்டிலில் தண்ணீர்,
பையில் கட்டுச்சோறு,
அலுவலக நாற்காலி.
சூ..சூச்சு சொற்கள்
சாட்டைக் கம்பு,
பொக்குத்தாணியம்.
அலுவலக அறநெறிகள்
எச்சரிக்கை விதிகள்
மாசக்கடைசியில் கவர்.
எல்லாம் சரி...
எங்கிருந்து வந்ததிந்த
கோள் மூட்டிப்
போட்டுக் கொடுக்கும்
பழக்க வழக்கம் ?
ஆடுகளுக்கு கூடாரம்,
மாடுகளுக்கு ஒருகம்பும் கயிறும்.
பாட்டிலில் தண்ணீர்,
பையில் கட்டுச்சோறு,
அலுவலக நாற்காலி.
சூ..சூச்சு சொற்கள்
சாட்டைக் கம்பு,
பொக்குத்தாணியம்.
அலுவலக அறநெறிகள்
எச்சரிக்கை விதிகள்
மாசக்கடைசியில் கவர்.
எல்லாம் சரி...
எங்கிருந்து வந்ததிந்த
கோள் மூட்டிப்
போட்டுக் கொடுக்கும்
பழக்க வழக்கம் ?
Subscribe to:
Posts (Atom)