Showing posts with label தேர்தல்2011. Show all posts
Showing posts with label தேர்தல்2011. Show all posts

17.3.11

1952 சுதந்திர இந்தியாவின் முதல் தமிழகத் தேர்தல். வரலாறு




சுதந்திர இந்தியாவின் முதல் ஜனநாயகத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடக்க இருந்தது. சில நடைமுறை அனுபவக்குறைச்சலால் அது 1952 ஆம் ஆண்டுக்குத்தள்ளிப்போனது. அப்போது  கேரளம் ஆந்திரா கர்நாடகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகானமாக இருந்தது தமிழகம்.மொத்தம் 375 தொகுதிகள்,காங்கிரஸ்,இந்தியக்கம்யூனிஸ்ட் என இரண்டே இரண்டு தேசியக்கட்சிகள்.பத்து பிரதேச மற்றும் சுயேச்சைகள் களத்தில் இருந்தன.இந்தப்பெட்டிக்குள்ளே இருக்கும் பட்டியலைப்பாருங்கள்.

அதற்குள் பாட்டாளி மக்கள் கட்சியாக பரிணமித்த வன்னியர் கட்சி. விவசாயிகள் சங்கமாக மாறிய கிசான் பார்ட்டி.அகில இந்திய பட்டியலின மக்கள் கட்சி என பன்முகத்தனமை கொண்ட கட்சிகள் அப்போதே முளைத்துவிட்டன. அதேகாலத்தில் திராவிடர் கட்சி சி.என்.அண்ணாத்துரை தலைமையில் இரண்டாகப்பிளந்து திக திமுக வாகியிருந்தது. எனினும் இரண்டும் தேர்தலில் போட்டி யிடவில்லை.ஆனால் தஞ்சை போன்ற பகுதிகளில் திக கம்யூனிஸ்ட் கட்சியையும்,கடலூர் வேலூர் பகுதிகளில் திமுக வன்னியர் கட்சியையும் ஆதரித்தது.இரண்டுமே தங்களுக்கு திராவிடப்பொன்னாடு வேண்டுமென்கிற கோரிக்கையில் வலுவாக இருந்த காலம் அது. 1957 ல் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஒற்றை இலக்க தொகுதிகளை கைப்பற்றி.1962 ஆம் ஆண்டு அது 64 தொகுதிகளாகி 1967 ஆம் ஆண்டு ஆடியைப்பிடித்தது திமுக.

அதுகிடக்கட்டும் 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலுக்கு வருவோம்.கங்கிரஸ் கட்சி மவுண்ட் பேட்டனிடமிருந்து சுதந்திரத்தை தாங்கள் தான் வாங்கிக்கொடுத்தோம் என்கிற தேசீயப் பெருமிதத்தோடு களமிறங்கிய அந்த முதல் தேர்தலில் ஜெயிக்க முடிந்த முடிந்த தொகுதிகள் வெறும் 152 மட்டுமே. இரண்டாவது பெரிய கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தொகுதிகள் மொத்தம் 62 இதரக்கட்சிகள் சுயேச்சைகள் சேர்ந்து மொத்தம் 161.ஆகவே யார் ஆட்சி அமைப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்து. அந்த முதல் தேர்தலிலேயே குதிரை பேரம் துவங்கி விட்டது. தேர்தலில் போட்டியிடாத சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை அரசு அமைக்க அழைத்தார் கவர்னர் பிரகாசம்..அதை எதிர்த்து தோழர் ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார். வழக்கு தள்ளுபடியானது.


INCSEATSCPISEATSOTHERSSEATS
Indian National Congress (INC)152Communist Party of India (CPI)62Kisan Mazdoor Praja Party (KMPP)35
Tamil Nadu Toilers Party (TTP)19
Socialist Party (SP)13
Krishikar Lok Party (KLP)15
Commonweal Party (CWP)6
Madras State Muslim League (MSML)5
Forward Bloc (Marxist Group) (FBL (MG)3
All India Scheduled Caste Federation (SCF)2
Justice Party (JUSP)1
Independent (IND)62
TOTAL (1952)152TOTAL (1952)62TOTAL (1952)161
( நன்றி: விக்கிப்பீடியா)

கம்யூனிட்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளவும்,கவர்னராட்சியையும் விரும்பாத ராஜாஜியும் ராம்நாத் கொயங்காவும் சுயேச்சைகளைக் கறைத்தனர்.அதில் கறைந்த வன்னியர் கட்சி,முஸ்லீம் லீக் இன்னும் சில சுயேச்சைகள் ( காங்கிரசாக மாறிய) ஆதரவோடு காங்கிரஸ் பெரும் பாண்மையை நிரூபித்தது.பிரிட்டிஷாரின்,உள்ளூர் பெருந்தனங்களின் ஆசியோடும் ஜாதிக்கட்சிகளின் ஆதரவோடும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

தீப்பறக்கும் கேள்விகளோடும் தீராத கோரிக்கைகளோடும் தோழர் கல்யாணசுந்தரம் தலைமையில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது கம்யூனிஸ்ட்
கட்சி.

மிகப்பெரும் நம்பிக்கையோடும் மக்களின் ஆதரவோடும் பட்டொளி வீசிப்பறந்தது செங்கொடி

16.3.11

போடுங்கம்மா ஓட்டு ஏழைகளின் அடிவைத்தப்பாத்து.


அவராண்டார் இவராண்டார் எனினும் மக்களே மாண்டார்.இது மன்னராட்சி பற்றிய புதிய புரிதல்.எண்ணிக்கையில் எந்தக்கட்சி ஜெயித்தாலும் தோற்கப்போவது ஜனங்கள் என்பது மக்களாட்சியின் மீதும் நிகழ் அரசியலின் மீது கிடக்கும் கனத்த விமரிசனம். நடுவே கோடிருப்பது போன்ற மாய எல்லைக்கு இருபுறமும் போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறு பிள்ளைகள் விளையாட்டில் கடைப்பிடிக்கப்படும் குறைந்தபட்ச நியதிகள் கூட இல்லாமல் குளம்பிக்கிடக்கிறது ஆதரவும் எதிரும்.

விஷமருந்திச்சாவது,தூக்குக்கயிற்றில் தொங்குவது என இரண்டே இரண்டு நிர்ப்பந்தங்கள் மட்டும் சந்தையில் தேரக் கிடைக்கும். எதைத் தேர்ந்தாலும் இருட்டு. அந்தரத்தில் ஆள்  தொங்கினாலும் நிழல் எதாவது ஒரு பக்கத்தில் விழுந்து தொலைக்கிறது. ஜெயித்து உட்காருகிற வரை அவர் நல்லவர். தோற்றுத் திரும்பும் வரை இவர் கெட்டவர் இதுதான் அரசியல்.
புரட்டிப்போடும் நெம்புகோல்களை கண்டுபிடிக்கவேண்டும். எச்சரிக்கை. அது லத்திக்கம்புகளாக மாறிவிடும் அபாயத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.