Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

31.8.11

பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கும் பெரியவர் ஹசாரே இயக்கம்.


லஞ்சத்துக்கும் முன்னாடிப்பிறந்த மூத்த வியாதிகள் அப்படியே தொடர.ஊடகங்களின் ஊதிப்பெருக்கலில்  உச்சானிக்கொம்புக்கே ஏறி விட்டது லஞ்சத்துக்கு எதிரான புரட்சி.எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே பொது செய்தியாக பெரியவர் ஹசாரே உடனடித் தேசிய நாயகனாகி விட்டார்.லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்.ஆமாம்.சாதிச்சான்றிதழ் வாங்குவதற்கு நான் தாசில்தார் அலுவலகத்துக்கு கொடுத்தேன்.தாசில்தார் அலுவலக சிப்பந்தி இருசக்கர வாகனம் வாங்கிப்பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்துக்குப் போனார். வட்டாரப்போக்குவரத்து அதிகாரி தனது அந்தச் சம்பாத்யத்தில் சொத்துவாங்கி அதைப்பதிய பத்திரப் பதிவு அலுவலகம் போனார்.பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் தன்மகனை தொழில் நுட்பக்கலூரியில் சேர்க்க  மூட்டை கட்டிக் கொண்டு போனார்.தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டை சூட்கேசுகளோடு ஆட்சியாளர்களிடம் போனார்.ஆட்சியாளர்கள் தங்களின் நாற்காலி நாட்களை நீட்டிக்க என்னிடம் என் குடும்பத்தாரிடமும் கொடுத்தார்கள்.

சங்கிலித் தொடர்போல நீண்டு பிணைந்திருக்கிற இந்த கண்ணிக்குள் ராம்லீலா மைதானத்து மேடைகளில் அமர்ந்திருப்போர் தொடங்கி தேநீர்க் கடையில் நாளைக் காலையில் லஞ்சம் நாட்டைவிட்டு ஓடிவிடும் என்று கூவுகிற தினத்தந்தியால் உணர்ச்சிவசப்பட்ட போராட்டக் காரன் வரை இணைக்கப் பட்டிருக்கிறான். தாங்கள் கொடுப்பதை கண்ணக்கில் எடுத்துக்கொண்டு வாங்கியதை வருமாண வரிக்காரர்களிடம் மறைப்பது போல மனசாட்சியிடம் மறைத்துவிட்டு சனம் கும்பல்கும்பலாக கூவுகிறது லஞ்சம் ஒழிக என்று. அந்த குரலின் சத்தத்தில் பெரியவர் ஹசாரே உடனடிக் கதாநாயகனாகிவிட்டார். எனில் வில்லன் யார்.

வணிகவியலின் விதிப்படியும் வாழ்வியலின் விதிப்படியும் கொடுப்பவர் இருந்தால் பெறுபவர் இருந்தே ஆகவேண்டும். அதாவது வாங்குகிற வில்லன் யார்.காங்கிரசா ? பாஜகாவா ? திமுகவா ? அதிமுக வா தேதிமுகவா ?. யார் அந்த தேசீய எதிரி. இந்த அமைப்பு. நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய கடைநிலை ஊழியன் சாம்பிளுக்காகப் பிடிபட்டு வேலையிழந்து தெருவில் திரிய லட்சக்கணக்கில் கல்லாக்கட்டுகிற கோமான்களுக்கு முதல் மரியாதை கொடுத்து ஒதுங்கிக்கொள்கிற இந்த அமைப்பு. தனது சாதிக்காரன், தனது மதத்துக்காரன், தனது கட்சிக்காரன் லஞ்சம் வாங்கும்போது கள்ளமௌனம் காத்துவிட்டு எதிர்ச் சாரியில் இருப்பவனை மாட்டிவிடத் துடிக்கும் இந்த அமைப்பு தான் அதன் எதிரி.  ஆதலால் தான் ஜனநாயக அமைப்பின் அடிநாதமான பஞ்சாயத்து முறையில் தனக்கு வேண்டாத சாதி  போட்டி போடக்கூட சகிக்காத மனோபாவமும். சொந்தச் சாதிக்குள்ளே ஜனநாயகத்தை, தேர்தல் முறையை ஏலத்துக்கு விடுகிற திமிரும் வந்து சேர்கிறது.

அதனலேதான் ஒரு மூன்று பேரின் உயிருக்காக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கையில் ஊடகங்கள் ஹ்சரேவின் புகழ்பாடிக் கொண்டிருந்தன. பெரியவர் ஹசாரே பதிரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிப்போனார். செய்தியோ சாப்பாடோ அரசியலோ கொள்கையோ இந்தியர்களுக்கு வீட்டுக்குள்ளே கொண்டுவந்து தரவேண்டும். முதல் நாள் எதிர் வீட்டில் நடந்த திருட்டை  மறுநாள்  செய்திபடித்து தெரிந்துகொள்கிற மனோபாவம் பெருகிக்கொண்டுவரும் இந்த தேசத்தில் புரட்சியைக்கூட தொலைக்காட்சி வழியே நடத்த துடிக்கிற உத்வேகம் பெருகிக் கிடக்கிறது.அதனாலேதானோ என்னவோ முன்னாள் புரட்சியாளர் ரஜினிகாந்தும் இந்நாள் புரட்சியாளர் விஜய்யும் ராம்லீலா மைதானத்துக்குப் போய் மொய்யெழுதிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்தப் படிதாண்டாப் புரட்சிக்கு அன்புத் தோழர் சொர்ணமால்யா தலைமைதாங்கி நடத்தி வந்தகாட்சி அழகானது. அதைப் பார்க்கையில் முன்னக்கூட்டியே நடக்கிற விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் மாதிரியும், முன்னாடி பெரும்பரபரப்பாக பிள்ளையார் பால்குடித்தாரே அதற்கு எழுந்த மக்கள் அலையைப்போலவும் தெரிந்தது.

அடுத்தவீட்டுக்காரி ஆம்பிளப்பிள்ளை பெத்தாலென்று எகிப்து மற்றும் துனீசியாவைப்போல எதாவது செய்யாவிட்டாலும்  அம்மிக் குழவியைப்போல பெரியவர் அன்னா ஹசாரேவைத் தூக்கிவைத்துக் கொண்டது தேசம். அப்பப்பா இந்த பத்திரிகைகள் தங்கள் பெயரையே ஹசாரே மலர்,ஹசாரே மணி, ஹசாரே தந்தி, ஹசாரே எக்ஸ்பிரஸ் என்று போடாததுதான் குறை.   இதை யெல்லாம் படித்த ஒரு கடை கோடி முகம்மதியத்தோழன் விசனப்பட்டார் இப்படியொரு மகான் குஜராத்தில் பிறந்திருக்கக்கூடாதா அப்படிப் பிறந் திருந்தால்  அநியாயமாக பலியிடப்பட்ட அப்பாவி உயிர்கள் பிழைத்துக் கிடந்திருக்குமே என்று. அதே போல விசனப்பட கோடிக்கணக்கானவை பட்டியலில் இருக்கிறது.

ஒரு பதின்மூன்றுநாட்கள் நடக்கும் உண்ணாவிரதம் தேசிய வியாதியைப் போக்கும் அருமருந்தாகுமானால். இந்த தேசம் முழுவதும் பீடித்துக்கிடக்கிற இன்னபிற நோய்களுக்காக வாழ்நாள் முழுக்க உண்ணாநோன்பிருக்க ஆட்கள் வரிசையிலிருக்கிறார்கள். ஆனால் நிலைமை பாரபட்சமானது என்பதை நாம் மகாத்மா காந்தி தொடங்கி நிறைய்ய வராலாற்று உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம்.  அதோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் மூச்சை மட்டுமே சுவாசித்து வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமகாலப்போராளி இரும்புப்பெண் பற்றி ஒரு வரிச்செய்தி கூடப்போடிருக்குமா இந்த ஊடகங்கள். மணிப்பூர் மலைகளில் இருந்து இறங்கிவந்து அந்த மக்களுக்கு ராணூவச்சட்டம் AFSPA 1958 யிலிருந்து விடுதலைவேண்டுமென சன்னம் சன்னமாய் செத்துக்கொண்டிருக்கிற ஐரோம் சர்மிளாவைப்பற்றி எத்தனை தினத்தந்தி வாசகர்களுக்குதெரியும். குறைந்த பட்சம் மணிப்பூர் இந்த தேசத்தில் இருக்கிற இன்னொரு மாநிலம் என்பது கூடத்தெரியுமா ?

அப்துல்கலாமை வரிக்குவரி எழுதுகிற சினிமா வசனகர்த்தாக்கள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் ராணுவம் பிடித்துக்கொண்டுப்போன தங்கள் வீட்டு ஆண்களின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற வலிபற்றி  எழுதி யிருக்கிறார்களா. மாட்டை கறிக்காக அடிப்பது உயிர்வதை என்பதை வலியுறுத்தக்காட்சிகள் அமைக்கிற படைப்பாளிகள் கயர்லாஞ்சியில் நடந்த கொடுமைகள் பற்றி சினிமாவில் பேசாவிட்டாலும் சரி குறைந்த பட்சம் தங்களுக்குள்ளாவது பேசிக்கொள்வார்களா ?.

இது எடுபடாத கேள்விகள்.

ஆனால் எடுபடுகிற கேள்வி ஒன்றிருக்கிறது. ஹசாரேவின் இந்த இயக்கத்தினால் லஞ்சம் ஒழியப்போகிறதோ இல்லையோ கட்டாயம் ஒரு ஆளும் அரசு ஒழிந்து விட வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. சரி அது ஒழிந்த பின்பு எது ? அதற்காகத்தான் இந்த ஊடகங்கள் ஓடி ஓடி பரபரப்பாக்குகின்றன. உண்மையான விடுதலைப் போராட்டததை மறைத்துவிட்டு மகாத்மாவை முன்னிறுத்திக் காங்கிரசுக்கு ஜெண்டாத் தூக்கிய அதே ஊடகங்கள் தங்களின் ஜெண்டாவுக்குப் பின்னாடி ஒரு அஜண்டா ஒளித்து வைத்திருப்பதை உற்று அவதானித்தால் புலப்படும்.
ஆவணப்படம் afspa 1958
ஆவணப்படம் afspa 1958
http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.htmlhttp://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.html

http://timesofindia.indiatimes.com/india/Iron-lady-of-Manipur-calls-Anna-Hazare-campaign-somewhat-artificial/articleshow/9825079.cms

25.11.10

மறதியெனும் புதை சேற்றுக்குள்

'mission scandal eradication' திருப்திகரமாக முடிந்தது.

இனி  புரட்சிப்பெண் vs சுதந்திரப்போராட்ட தியாகி வழக்கில் ஊடகங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தும்.உலக வரலாற்றில் முதன் முறையாக அரங்கேறும் இந்த குடும்பச் சண்டையின் ருசிகர ,எதிர்பாராத, ஹேர்பின் திருப்பங்கள் ஆகியவற்றை தொகுத்துவழங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள். இது போதாதென்று 162 கோடி மெகா பட்ஜெட்டில் மொழிமற்றம் செய்யப்பாடப்போகிறது ஒரு உலகமஹா காவியம்.அதற்கும் கணிசமான பக்கங்கள் ஒதுக்கியே தீரவேண்டும்.

மறதி எனும் புதைசேற்றில் நுற்றாண்டு  சூதாட்டம் தொடர்கிறது கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை காலம் தொடரும்?

14.8.10

ஊழல் மொய்க்கிற தேசம்.

எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் தலைப்புச்செய்திகள் இந்த தேசத்தை மூழ்கடித்துக்கொடிருக்கும் முடைநாற்றத்தைச்சொல்லும் சேதிகளாகவே இருக்கிறது.கேதன் தேசாய்,கில்,அமித்ஷா,செத்துப்போன ராஜீவ் காந்தி,போபால்,டௌ கெமிக்கல்,இப்படி இந்திய துனைக்கண்டத்தை ஆளும் அரசர்களும் அவர்களின் நேரடி ஏவலாட்களான உயர் அதிகாரிகளும்,அவர்களை இயக்குகிற பெருமுதலைகளும்  ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்க குற்ற விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். இதில் எதிர்க்கட்சி- ஆளும்கட்சி பேதமில்லாமல் எல்லோரும் ஜெயிக்கிறார்கள் தோற்றுப் போனது ஜனநாயகமும் அதைக் கட்டிக்காக்கும் மக்களும் தான்.

சென்ற வாரம் சிவகாசிக்கு அருகில் ஒரு வெடி விபத்து நடந்தது சட்டவிரோதமாக பட்டாசுதயாரித்தவர்களைப்பிடிக்கப்போன காவல் துறை மற்றும் வருவாய்த்துறை முதல் நிலை அதிகாரிகள் ஒன்பதுபேர் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள்.தேடுதல் வேட்டைக்குப்போனவர்கள் பலியான விபரங்களை முன்வைக்கும் செய்திகள் முரண்பாடுள்ளதாக இருக்கிறது.பத்திரிகைச் செய்திகளும் வாய்மொழிச் செய்திகளும் அரசு நிர்வாகத்தின் கையாலாகத்தன்மைக்கு மிகப்பெரிய உதாரணம்.

சிவகாசியைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் அமோகமாக நடைபெறுவது இன்றல்ல நேற்றல்ல.அதற்கு ஒரே காரணம் மோசமான கூலியும்,அமோகமான லாபமும் தான்.அதைக்கண்டு கொள்ளாத தொழிலாளர் நலத்துறை மட்டுமல்ல அந்தத் தொழிலைக் காபந்து பண்ணும் இன்னும் அதிகாமான துறைகளும் தான். பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் என்பது மத்திய கலால் துறை,மாநில விற்பனைவரித்துறை,வெடிபொருள் மற்றும் சுரங்கத்துறை,வருவாய்த்துறை,தொழில்துறை,மாசுகட்டுப்பாட்டுத்துறை என்கிற துறைகளின் கட்டுப்பட்டிலும்,கண்காணிப்பிலும் இயங்குகிறவை.ஆனால் அந்தந்த துறைகளின் கட்டுப்பட்டுத்திறமை என்ன என்பதை வருடா வருடம் நடக்கும் விபத்துக்கள் நாறடிக்கின்றன.

இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மத்தியப்பிரதேசத்திலிருந்து இன்னொரு பூதம் கிளம்புகிறது.இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி இது.600 டன் வெடிபொருட்கள் காணவில்லை என்று கைபிசைகிறார் அதை ந்ர்வகிக்கும் நேர்மைமாறா உயர்திரு. உபாத்யாய்.அதோடு நில்லாது எனக்கு பொறுப்பில்லை என்கிறார்.எல்லாம் உண்மை.மக்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் எல்லாமே இங்கு சாத்தியம்.




600 டன் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் மாயம்:தீவிரவாதிகள் கடத்தலா? சாகர், ஆக.13-

600 டன் வெடிபொருட் கள் ஏற்றப்பட்ட 61 லாரி களைக் காணவில்லை. இத னால் மத்தியப் பிரதேசத் தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. இவற்றை நக்சலைட்டு கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியி லிருந்து இந்த வெடி பொருட்கள் ஏற்றிய லாரி கள் மத்தியப் பிரதேச மாநி லம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ் புளோ சிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டன. மொத்தம் 61 லாரி களில் 600 டன்னுக்கும் மேற் பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெடி பொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ் புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத் யாய் கூறுகையில், உரிய உரிமங்களுடன் வந்த லாரி களில்தான் இந்த வெடி பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற் போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக் குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார். இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்ட வையாகும். அதில் டெட்ட னேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற் போது பூட்டப்பட்டுள் ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடி பொருட்களை அந்த நிறுவ னத்திற்கு அனுப்பினர் என் பது தெரியவில்லை. கணேஷ் வெடிபொருள் நிறு வனத்தின் உரிமையா ளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாது காப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட் டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலி ருந்துதான் டெலிவரி செய் யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாய மான சம்பவம்பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாகூர் உள்ளிட்டவர் கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிறு பான்மை மக்கள் மீது பழி போட முயன்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், இந்த பாணி யில் வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இப்போது பெருமள வில் வெடிபொருட்கள் கடத்தப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.