சிற்பியின் உளிக்கு
சிலை மோதும் இசைபோதும்.
கருவேலங் காட்டுப் பூக்களுக்கு
கடந்து போகும் காற்றுப்போதும்.
மடிமோதும் கன்றுக்கு அமுதமும்
இல்லது போனால் தலைகோதும்
தாயின் விரலும் குரலும் போதும்.
தவிச்ச வாய்க்கொரு குவளை
தண்ணீர் போலச் சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்
சிறிதினும் சிறியது போதும்