Showing posts with label நகரச்சாமம். Show all posts
Showing posts with label நகரச்சாமம். Show all posts

12.11.09

பனியில் விழித்திருக்கும் நரகச் சாமம்.

தேநீர்க் கொப்பறைகளின் வெப்பத்தில்
வாழ்வு துவக்கும் டீ மாஸ்டர்கள்.
கடந்துபோன பேருந்துக்கும்
வரப்போகும் பேருந்துக்குமான
நிச்சயமற்ற இடைவெளியில்
கண்ணசரும் ஆட்டோக்காரர்.


அணைத்த பீடியைமீளக் கொழுத்தி
இச்சைக் கதையும் ஹெர்பல்புகையும்
விட்டதிலிருந்து தொடரும் ரிக்சாக்காரர்.
மரவட்டப்பூச்சிகளை ஞாபகப்படுத்தியபடி
படுத்துறங்கும் இலக்கமில்லா தெருவாசி.
முதல் பேருந்துக்காக விநாடி விநாடியாய்
கழித்துக் காத்திருக்கும் கிராமவாசி.


ஒற்றை விசில் அலறலோடு
மிதிவண்டிகளைப் பின்னிழுக்கும்
கூர்க்காவின்மலைப் புலத்து ஏக்கங்கள்.
நேற்றைய சுவடுகளில் மஞ்சள்
கவியெழுதும் நியான் ஒளியும்

உறங்கக் காத்திருக்கும் விடியல்தேடி.