Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

24.5.10

ஒரு பேனாக் கத்திகூட காட்சி படுத்தப்படாத, புரட்சிக்காரனைப் பற்றிய திரைப்படம்


எண்பதுகளில் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட போது அதென்ன பெயர் ' சே ' என்றுதான் எல்லோரையும் போலக் கிண்டலடித்தேன். அவர் ஒரு புரட்சிக்காரன் என்று கேல்விப்பட்டபோது இன்னும் அதிகமாகக் கிண்டலடித்தேன் ஏனென்றால் அப்போதும் எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது. இங்கு எல்லாமே தலைகீழாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவன் தான் பிறந்த நாட்டுக்காகப் போராடாமல் இன்னொரு நாட்டுக்காகப் போரடியவன் என்பதையும், வெற்றியடைந்து ஒரு அரசமைத்து அதில் முக்கிய மந்திரியாக இருந்து அதையும் உதறிவிட்டு வேறு ஒரு நாட்டு விடுதலைக்காக காட்டுக்குப் போனான் என்பதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் ஆர்வம் கூடியது. அப்படி ஒரு நிஜப் புரட்சிக்காரனப் பற்றிய படம் தான் '' மோட்டார் சைக்கிள் டைரீஸ்".



ஒரு பழைய்ய நார்ட்டன் 500 இருசக்கர வகனம், கொஞ்சம் உடமைகள், நிறைய்ய உற்சாகத்தோடு இரண்டு இழஞர்கள் புறப்படுகிறார்கள். இடம் அர்ஜெண்டினாவின் ஃபூனோ ஏர்ஸ், வருசம் 1953 ஜனவரி மாதம். இரண்டுபேரின் குடும்பத்தாரும் விடைகொடுக்க கிளம்புகிற வாகனம் தாய் தந்தையரின் கண்ணெதிரே ஒரு நான்குசக்கர வாகனத்தோடு மோத இருந்து பதற வைத்து, நொடியில் சமாளித்து தப்பித்து கிளம்புகிறது. வழிநெடுக கும்மாளமும் உற்சாகமும் நிறைந்த பயணம். வாகனப்பயணத்தின் விதி மாறாமல் அந்தப்பழய்ய நார்ட்டன் பைக் பல இடங்களில் அவர்களின் காலை வாறுகிறது. நமது எதிர்பார்ப்பையும் சேர்த்து.

முதலில் உலகம் முழுக்க இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இளம் தாடி, தோளில் புரளும் முடியோடு சேகுவேரா காண்பிக்கப்படவேயில்லை. இரண்டாவது புரட்சிக்காரனின் மேலிருக்கிற இறுக்கமான மற்றும் மரியாதை கலந்த பிம்பமும் இல்லை. மொழு மொழுவென இருக்கும் சே வழிநெடுக பெண்களுக்காக அலைகிறான். குடிக்கிறான் பகடி செய்கிறான். மெக்கானிக்கின் மனைவியை மோகித்து பிடிபட்டு விரட்டப்பட்டு ஓடுகிறான். கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான் 'சே' யின் நண்பன். படம் முழுக்க மோட்டார் சைக்கிளும் பயணமும் மையக்கருவாக வரப்போவதில்லை என்பதை நாம் யூகிக்க முடிந்தாலும் நமது எதிர்பார்ப்பை உடைக்கிற கதை அமைப்புதான் அந்தப்படத்தின் வித்தியாசம். ஆமாம் ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய கதையில் எதாவதொரு இடத்தில் ஒரு சின்ன வன்முறைகூட காட்டப்படவேயில்லை. அட ஒரு பேனா கத்தி கூட காட்டப்படவேயில்லை என்றால் பாருங்களேன்.

சரிசெய்ய முடியாத அளவுக்கு பழுதான மோட்டார்சைக்கிளை உதறிவிட்டு தென் அமெரிக்காவின் வறுமையை ஊடறுத்துக்கொண்டு தொடர்கிறது பயணம். சிலி, பெரு அட்டகாமா பாலைவனம், அனகோண்டா சுரங்க கழகம் அங்கே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காரனத்துக்காக வீடு உடமைகள் பறிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை. அங்கிருந்து மாச்சு பிச்சு,கூழ்க்கோ, இறுதியில் லிமா போய்ச்சேருகிறார்கள் அங்கேதான் மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சான் பாப்லோ தொழுநோய் மையத்துக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள். அமேசான் நதிக்கரையில் ஒரு கரையில் வசதியும், சுத்தமும், தொழுகையும் கட்டுப்பாடும் நிறைந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் இருப்பிடம். இன்னொரு கரையில் வறுமையும்,அசுத்தமும், ஒழுங்குமற்ற கருப்பு தொழு நோயாளிகள் புகழிடம்.

ஆனால் இந்த இருவரும் மருத்துவ விதிகளையும், மத விதிகளையும் மீறுகிறார்கள். ஆம் கையுறை இல்லாமல் நோயளிகளை அனுகுவது பிரார்த்தனைக்குச் செல்லாமல் சாப்பிடுவது போலான மீறல்களுக்காக மூத்த மருத்துவர்களால் கண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் கன்னியாஸ்திரிகளாலும் நோயாளிகளாலும் வெகுவாக நேசிக்கப்படுகிறார்கள். எர்னஸ்டோ சேகுவாராவின் 24 வது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்புறையில் மெலிய குரலில் பேசுகிறான். கிறிஸ்தவ மத தொண்டு நிறுவன ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள் நிறைந்த அந்த சபையில் இந்த உலகம் பிளவு பட்டுக்கிடக்கிற அசமத்துவங்கள் குறித்துப்பேசுகிறான். தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை அந்த சமூகத் தொழுநோயிலிருந்த விடுவிக்கிற மருத்துவம் செய்யப்போவதாக அறிவிக்கிறான் பலத்த கரகோசத்துக்கும் வரவேற்புக்கும் மத்தியில். சே அங்கிருந்து கிளம்புகிற கட்சிகளோடு படம் முடிகிறது.

அவனது நண்பன் சேகுவேராவை அதற்குப்பிறகு ஹவானாவில் ஒரு மந்திரியாகத்தான் பார்த்தேன் என்று பிண்ணனியில்சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்த உண்மைப்பயணத்தின் கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் இந்தப்படத்தின் காட்சிகளும்மாறி மாறிக்காட்டப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் விவாதங்களைக்கிளப்பிய படமான ' தி சிட்டி ஆஃப் காட்' எனும் படத்தை தயாரிப்பாளர் வால்டர் சேல்ஸ் தான் இந்தப்படத்தின் இயக்குனர். முன்னதாக சேகுவேராவும் அவரது நண்பர் அல்பெடோ க்ரெனடாவும் எழுதிய நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படத்தின் கதைவசனம் ஜோஸ் ரிவேரா. சின்னத்திரையில் பிடல் காஸ்ட்ரோவாக நடித்த காயல் கார்சியா பெர்னல் சேகுவேரா வாகவும், நிஜவழ்க்கையில் மைத்துனரான ரோட்ரிகோ லா செர்னா நண்பனாகவும் நடித்து வெளிவந்த ஸ்பானியத்திரைப்படம்.

" மோட்டார் சைக்கிள் டைரீஸ் "

இதுவும் கூட ப்ளாக் டைரியிலிருந்து மீளப்பதிவிட்டது

28.9.09

கமல் ஒரு காமன் மேன் இல்லை.

கோவில்பட்டி தியேட்டருக்கு போகும்போது ஒரு பரபரப்பு இருந்தது. நுழைவுச்சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பரபரப்பு. வரிசையில் கடைசி ஆளாய் நின்ற போதும் அந்தப்படபடப்பு குறையவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனை முறை ஹவுஸ்புல் பலகை தொங்கியதைப் பார்த்துவிட்டு, நுழைவுச்சீட்டு கொடுப்பவரிடத்தில், காவலாளியிடம், சைக்கிள் ஸ்டாண்ட் காப்பாளரிடம் தொங்கோ தொங்கென்று தொங்கியிருக்கிறோம். அதன் நீட்சியாகப் பரபரப்பு இருந்ததில்ஆச்சரியம் இல்லை. நுழைவுச்சீட்டுக் கிழிக்குமிடத்தில் அரசியல் கலப்படமில்லாத தொழிற்சங்கச் செயலாளர் ஒருவர் கௌரவ மேலாளராகி கிழித்துக்கொண்டிருந்தார். பெண்களுக்கு ரூ 10ம் ஆண்களுக்கு ரூ40ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது ஒன்றும் மானியமோ, ஒதுக்கீடோ இல்லை. இப்போதெல்லாம் பெண்கள் தியேட்டர் பக்கமே வருவதில்லையாம். அதுதான் இந்தச்சலுகை. ஆனாலும் கூட பின்னிருக்கைகள் மட்டும் நிறம்பியிருக்க சினிமாக்களில் வரும் பாழடைந்த பங்களா மாதிரித் தியேட்டர் தெரிவதைத்தடுக்க முடியவில்லை. மாற்றம்.


ஆனால் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்பரபரப்பு. ஒரு டூயட் இல்லை. இரும்புக் கம்பியைக்கட்டித் தொங்கவிட்டு அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு சண்டையிடுகிற காட்சிகள் இல்லை. கதாநாயகி இல்லை. கடைசி வரையில் கதாநாயகனுக்குப் பேரில்லை. படம் சுவாரஸ்யக் கண்ணிகளைத் தொடுத்துக்கொண்டே வேகமெடுக்கிறது. இதுவும் தமிழ்திரையுலகம் சந்தித்திருக்கிற மாற்றம். மூன்று தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடித்துச் சாகிறவரையில் கமலஹாசனை கண்டுபிடிக்க போலீஸ் அவிழ்க்கிற முடிச்சுகள் அவரை ஒரு முஸ்லீம் என கருதவைக்கிறது.தான் ஒரு முஸ்லீம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.


தீவிரவாதி ஒருவன், ஆரிப் என்னும் காவல் அதிகாரியிடம் சொல்லும் கதையை மீறி அவர் கடமை மிக்கவராக மட்டும் முன்னிறுத்துவதும், கமல் சொல்லும் கதைகேட்கிற ஆய்வாளர் முதல் முதன்மைச் செயலாளர் வரை ஏன் கமிசனர் மோகன்லால் கூட மனம் மாறுவதான சித்தரிப்பு திரைக்கதையில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இது நாயகன், இந்தியன், ரமனா, மலையூர் மம்பட்டியான் போன்ற நெகடிவ் ஹீரோக்களை வெகுமக்கள் கப்பாற்றுவதான இமேஜ் பில்டிங் சித்தரிப்பு.ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை. ஒரு கைதியின் டைரி போன்ற படங்களோடு கூடிய நாயகன் தான்.


அப்புறம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பொறுப்பிலிருக்கிற இன்ஸ்பெக்டர் கேனையாக சித்தரிக்கப்படுவதும் முதல் முறையல்ல. அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் தொடங்கி பல படங்களில் இவருக்கு இதுதான் வேலை. இதில் பெண்களைக் கிண்டலடிக்கும் தத்துவ காமெடி கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட கேனை இன்ஸ்பெக்டர் இறுதிக் காட்சியில் தான் உருவமைத்த கணினி ஓவியத்தைத் தானே மறுதலிக்கிறார். தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலும் புளிமூட்டை ராமசாமி, போன்ற ஐம்பது வருட தமிழ்சினிமா கதை சொல்லலிருந்து தடம் மாறவில்லை என்பது நிரூபணமாகிறது. நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.


படம் முடிந்து திரும்பி வரும்போது மோகன்லால் மாதிரியே ஐம்பது பர்வையாளர்களும் தியேட்டரைக் காலி பண்ணிக் கொண்டு திரும்ப வேண்டியதிருக்கிறது. அதற்குப்பிறகு வெற்றுத் தியேட்டரில் மோகன்லாலின் வாய்ஸ் ஓவர் அசரீரி போல் கேட்டுக் கொண்டிருக்கிறது. ரீல் ஓடி முடிந்த பின்னர் தானே, ஆபரேட்டர் படத்தை நிறுத்த முடியும். துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் ,பொறி, தேங்காய், சுண்டல் வீட்டுக்கு எடுதுக்கொண்டு போகமுடியும். அவர் முஸ்லீமாக இருந்தால் கூட.

30.7.09

ஒரு பேனாக் கத்திகூட காட்சி படுத்தப்படாத புரட்சிக்காரனைப் பற்றிய திரைப்படம்








என்பதுகளில் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட போது அதென்ன பெயர் ' சே ' என்றுதான் எல்லோரையும் போலக் கிண்டலடித்தேன். அவர் ஒரு புரட்சிக்காரன் என்று கேல்விப்பட்டபோது இன்னும் அதிகமாகக் கிண்டலடித்தேன் ஏனென்றால் அப்போதும் எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது. இங்கு எல்லாமே தலைகீழாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவன் தான் பிறந்த நாட்டுக்காகப் போராடாமல் இன்னொரு நாட்டுக்காகப் போரடியவன் என்பதையும், வெற்றியடைந்து ஒரு அரசமைத்து அதில் முக்கிய மந்திரியாக இருந்து அதையும் உதறிவிட்டு வேறு ஒரு நாட்டு விடுதலைக்காக காட்டுக்குப் போனான் என்பதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் ஆர்வம் கூடியது. அப்படி ஒரு நிஜப் புரட்சிக்காரனப் பற்றிய படம் தான் '' மோட்டார் சைக்கிள் டைரீஸ்".



ஒரு பழைய்ய நார்ட்டன் 500 இருசக்கர வகனம், கொஞ்சம் உடமைகள், நிறைய்ய உற்சாகத்தோடு இரண்டு இழஞர்கள் புறப்படுகிறார்கள். இடம் அர்ஜெண்டினாவின் ஃபூனோ ஏர்ஸ், வருசம் 1953 ஜனவரி மாதம். இரண்டுபேரின் குடும்பத்தாரும் விடைகொடுக்க கிளம்புகிற வாகனம் தாய் தந்தையரின் கண்ணெதிரே ஒரு நான்குசக்கர வாகனத்தோடு மோத இருந்து பதற வைத்து, நொடியில் சமாளித்து தப்பித்து கிளம்புகிறது. வழிநெடுக கும்மாளமும் உற்சாகமும் நிறைந்த பயணம். வாகனப்பயணத்தின் விதி மாறாமல் அந்தப்பழய்ய நார்ட்டன் பைக் பல இடங்களில் அவர்களின் காலை வாறுகிறது. நமது எதிர்பார்ப்பையும் சேர்த்து.



முதலில் உலகம் முழுக்க இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இளம் தாடி, தோளில் புரளும் முடியோடு சேகுவேரா காண்பிக்கப்படவேயில்லை. இரண்டாவது புரட்சிக்காரனின் மேலிருக்கிற இறுக்கமான மற்றும் மரியாதை கலந்த பிம்பமும் இல்லை. மொழு மொழுவென இருக்கும் சே வழிநெடுக பெண்களுக்காக அலைகிறான். குடிக்கிறான் பகடி செய்கிறான். மெக்கானிக்கின் மனைவியை மோகித்து பிடிபட்டு விரட்டப்பட்டு ஓடுகிறான். கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான். படம் முழுக்க மோட்டார் சைக்கிளும் பயணமும் மையக்கருவாக வரப்போவதில்லை என்பதை நாம் யூகிக்க முடிந்தாலும் நமது எதிர்பார்ப்பை உடைக்கிற கதை அமைப்புதான் அந்தப்படத்தின் வித்தியாசம். ஆமாம் ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய கதையில் எதாவதொரு இடத்தில் ஒரு சின்ன வன்முறைகூட காட்டப்படவேயில்லை. அட ஒரு பேனா கத்தி கூட காட்டப்படவேயில்லை என்றால் பாருங்களேன்.



சரிசெய்ய முடியாத அளவுக்கு பழுதான மோட்டார்சைக்கிளை உதறிவிட்டு தென் அமெரிக்காவின் வறுமையை ஊடறுத்துக்கொண்டு தொடர்கிறது பயணம். சிலி, பெரு அட்டகாமா பாலைவனம், அனகோண்டா சுரங்க கழகம் அங்கே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காரனத்துக்காக வீடு உடமைகள் பறிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை. அங்கிருந்து மாச்சு பிச்சு,கூழ்க்கோ, இறுதியில் லிமா போய்ச்சேருகிறார்கள் அங்கேதான் மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சான் பாப்லோ தொழுநோய் மையத்துக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள். அமேசான் நதிக்கரையில் ஒரு கரையில் வசதியும், சுத்தமும், தொழுகையும் கட்டுப்பாடும் நிறைந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் இருப்பிடம். இன்னொரு கரையில் வறுமையும்,அசுத்தமும், ஒழுங்குமற்ற கருப்பு தொழு நோயாளிகள் புகழிடம்.



ஆனால் இந்த இருவரும் மருத்துவ விதிகளையும், மத விதிகளையும் மீறுகிறார்கள். ஆம் கையுறை இல்லாமல் நோயளிகளை அனுகுவது பிரார்த்தனைக்குச் செல்லாமல் சாப்பிடுவது போலான மீறல்களுக்காக மூத்த மருத்துவர்களால் கண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் கன்னியாஸ்திரிகளாலும் நோயாளிகளாலும் வெகுவாக நேசிக்கப்படுகிறார்கள். எர்னஸ்டோ சேகுவாராவின் 24 வது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்புறையில் மெலிய குரலில் பேசுகிறான். கிறிஸ்தவ மத தொண்டு நிறுவன ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள் நிறைந்த அந்த சபையில் இந்த உலகம் பிளவு பட்டுக்கிடக்கிற அசமத்துவங்கள் குறித்துப்பேசுகிறான். தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை அந்த சமூகத் தொழுநோயிலிருந்த விடுவிக்கிற மருத்துவம் செய்யப்போவதாக அறிவிக்கிறான் பலத்த கரகோசத்துக்கும் வரவேற்புக்கும் மத்தியில். சே அங்கிருந்து கிளம்புகிற கட்சிகளோடு படம் முடிகிறது.



அவனது நண்பன் சேகுவேராவை அதற்குப்பிறகு ஹவானாவில் ஒரு மந்திரியாகத்தான் பார்த்தேன் என்று பிண்ணனியில்சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்த உண்மைப்பயணத்தின் கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் இந்தப்படத்தின் காட்சிகளும்மாறி மாறிக்காட்டப்படுகிறது.



2002 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் விவாதங்களைக்கிளப்பிய படமான ' தி சிட்டி ஆஃப் காட்' எனும் படத்தை இயக்கியவால்டர் சேல்ஸ் தான் இந்தப்படத்தின் இயக்குனர். முன்னதாக சேகுவேராவும் அவரது நண்பர் அல்பெடோ க்ரெனடாவும் எழுதிய நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படத்தின் கதைவசனம் ஜோஸ் ரிவேரா. சின்னத்திரையில் பிடல் காஸ்ட்ரோவாக நடித்த காயல் கார்சியா பெர்னல் சேகுவேரா வாகவும், நிஜவழ்க்கையில் மைத்துனரான ரோட்ரிகோ லா செர்னா நண்பனாகவும் நடித்து வெளிவந்த ஸ்பானியத்திரைப்படம்.



" மோட்டார் சைக்கிள் டைரீஸ் "