| மழைத்தட்டான் பறக்கும்போதும்ஊதக்காத்து வீசும் போதும்,குடைதேடுவதும், சாளரம் அடைப்பதுவுமாகஉலகம் கூட்டுக்குள் அடைகிறது.மனது மட்டும் திறந்து வெளியேறிஇழுத்துப்போகிறது பழைய நாட்களுக்கு. ஒவ்வொரு மழைத்துளியும்வேறு வேறு தண்ணீராலனது.மத்தியான மழை, சாயங்கால மழை முன்னிரவு மழை, பின்னிரவு மழை எனஓவ்வொரு மேகமும் தனக்கான நேரத்தை தேர்ந்து கொள்கிறது. நனையாத இடம் தேடி உயிர்கள் அலையும்ஓடி வரும் மனிதர் தேடும்குடை கூரை எல்லாம் மாயைமழை மனதையே ஈரமாக்கும்.வெட்டவெளியில் பெய்தாலும்மழை எப்போதும் அந்தரங்கமானது. |