Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

10.1.16

யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914


அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது.  விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போனவர்கள்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அயோத்திதாசர் எல்லா வழிகளிலும் உழைப்பை முன்னிறுத்தினார். அதுவே தனது இயக்கத்தின் மிகமுக்கியமான புள்ளியாகவும் கருதினார்.மேட்டிமைச் சாதிகள் உடல் உழைப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒருபோதும் உழைக்கத்தயாரக இருந்ததில்லை. ஆதலால் உழைப்பை அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். எனவே அயோத்திதாசர் தனது ஆதிவேதம் என்கிற நூலில், உழைப்பிலிருந்து வந்ததுதான் சிந்தனை, உழைப்பிலிருந்து வந்ததுதான் கண்டுபிடிப்புகள் என்பதையும் உழைப்பிலிருந்து வந்ததுதான் கலாச்சாரங்கள் எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான வாழ்வியல் ஆதாரங்களியும் முன்வைத்தார்.

அயோத்திதாசரின் இந்த ஓயாத பரப்புரைதான் தமிழ்ச்சூழலில் தனித்தமிழ்,சாதியற்ற தமிழகம்,உழைப்பாளர்களை போற்றுகிற சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது.

நன்றி அயோத்திதாசர் வலைத்தளம், மற்றும் முத்துமோகன்


2.2.12

இன்றைக்கும் ஒத்துப்போகும் பழங்கதைகள்


அது தாது வருசப் பஞ்சம்.திருடர்கள் பணம்,பொன்,பண்டங்களைத் திருடு வதை  விட்டு விட்டு.ஆக்கிவைத்த கஞ்சிப்  பானை களைக் களவாண்டு போனர்கள்.தேசம் முழுக்க பசியே வியாபித்திருந்த பஞ்சம் தலைதூக்கி ஆடியது. அவன் சொந்த ஊரைக் காலி பண்ணிவிட்டு சோறு கிடைக்கிற இடம்தேடி காடுமேடெல்லாம் அலைந்தான். பலநாள் அலைந்து கண்கள் பஞ்சடைத்துப் போய் ஓரிடத்தில் மயங்கி விழுந்தான்.

அந்த நேரத்தில் அங்குவந்த குடியானவன் ஒருவன்அவனைத் தூக்கிக் கொண்டுபோய் கண்முழிகக வைத்தான். கதைகேட்டான்.சொன்னான். இப்போதைக்கு என்னிடம் கொஞ்சம் கேழ்வரகும் வேட்டையாடிக் கொண்டு வந்த கொக்கும் இருக்கிறது சமைத்துத் தந்தால் சாப்பிடுவாயா என்று கேட்டான். ஆபத்துக்குப் பாவம் இல்லை உயிர் கொடு என்றான். கேழ்வரகை திரித்து,கொக்கைச் சமைத்துக் கலியும், கறியும் கொடுத்தான்.

அங்கேயே தங்கி விடுவதெனத் தீர்மானித்து அவனிடம் சொன்னான்.சரி என்னுடன்  தொழிலுக்கு வருவாயா எனக் கேட்டான்.சரி சொன்னான்.எனில் இன்றிரவு தொழிலுக்குப் போகலாம் என்று சொன்னான்.ஏன் இரவு என்று கேட்டான். பொறு அவசியம் வரும்போது சொல்கிறேன் என்றான்.இரவில் ஒரு வீட்டருகே போனார்கள். சன்னலை உடைத்து உள்ளே போ அங்கிருக் கும்  சாமான்களைத் தூக்கிக் கொண்டுவா என்று சொன்னான்.திருடுவதா மாட்டேன் என்று சொன்னான்.

’அப்ப என் கொக்கும் கலியும் கக்கு’
 என்றானாம்.

30.9.11

கண்மாய் அழிவும் உள்ளாட்சித்தேர்தலும்.

அடைமழைநேரம் மழை வெறித்ததும் அப்படியே கண்மாய்க்கரைப்பக்கம் காலார நடந்து போனால் சொத சொதவென நீர்பாரித்துக்கிடக்கும் செம்மண். பின்னாடித் திரும்பிப்பார்த்தால் கால்தடம் கூடவரும். கண்மாய்க்கரையில் ஏறி நின்றுபார்த்தால் நுங்கும் நுறையுமாய் சிகப்புத் தண்ணீர் வந்துகொண்டிருக்கும். அப்புறம் ஒருமாத காலத்துக்கும் த்ண்ணீர் செந்நிறமாகவே கிடக்கும்.நாளாக ஆக அது அலை யடித்து தண்ணீர் நிறமாக மாறும். புழுப்பூச்சிகள், தட்டான்கள், அரைத்தவளை, கெண்டைப்பொடிகள், சிறுநண்டுகள் தண்ணீர்ர்ச்சாரை, நீர்க்காக்காவென ஜீவராசிகள் புதுசாக்குடியேறும்.பழைய்ய டியூப்களில் காற்றடைத்துக்கொண்டு நீச்சலடிக்கலாம்.நீந்திக்களைத்தபோது நண்டுபிடிக்கலாம்.மடைக்கார ஒத்தையால் சண்முகண்ணாச்சியோடு சேர்ந்து மடைதிறக்கலாம்.அங்கிருந்து வரப்பு வழியே கண்மாய் நினைவுகளோடு வீடுசேரலாம்.




இவை எல்லாவற்றையும் அள்ளிச்சிதறி சண்டையும் கூத்தும் கும்மாளமுமாய் இறங்கி மீன்பிடித்து வருகிற ஒருநாள் வரும்.அது கண்மாய் அழிகிற நேரம்.அந்தசேறும் சகதியும் சண்டையும் வசவுமாக வந்து நிற்கிறது உள்ளாட்சித்தேர்தல்.ஆளாலுக்கு சகதிக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் கூடைகூடையாய் அள்ளிக்குவிக்க.