Showing posts with label முத்துக்குமரன். Show all posts
Showing posts with label முத்துக்குமரன். Show all posts

31.1.09

அண்டை உறவும், ஆண்டை உறவும், இந்திய அயலுறவும்


பேருந்து நெரிசலில் நசநசக்கும் வியர்வையைத் தாளாது தவிக்கிற நானும்.இடுப்பில் கைக்குழந்தையும் இன்னொரு கையில் மஞ்சள்பையையும் வைத்துக்கொண்டு திண்டாடும் கிராமத்துப் பெண்ணுக்கு இடம் தராத அரை நூறு மனிதர்களும்.


எதிர்வீட்டு அழுகைக்கு ஜன்னல் வழியே துக்கம் அணுப்பும் மத்திய மாந்தர்களும். ஆரியப்படை கடந்த வீரிய பெருங்காய டப்பாக்களும்.ஒற்றைவீட்டு சலவைக்காரரை மீசை திருகிக்கொண்டு மிதிக்கிற கோடிக்கணக்கான வீரர்களும். புலியை முறத்தால் விரட்டிவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் தமிழ்த்தாயினமும்.


பாகிஸ்தான் மீது வெடிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக செய்யப்பட்ட இந்திய ஆயுதங்களும். மதம், ஜாதி, இன்ன பிறவற்றைக் கழிவுகளை நுகர்ந்தே கண்டுபிடிக்கும் மெய்ஞானமும். அயல்நாடுகளில் அடகுவைக்க சொல்லிக்கொடுக்கும் விஞ்ஞானமும்.


முத்துக்குமரனுக்கு முன்னாள் செத்துச் செத்துப் பிழைக்கும்.