லியு க்சியாபூ தியானமென் சதுக்க நிகழ்வுகளுக்காக கைதுசெய்யப்பட்டு பதினோரு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சீனக்கவிஞர்.அவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதை அளிக்க சித்தமாக இருக்கிறது நார்வே நட்டின் நோபல் விருது அமைப்பு.சென்ற முறை இதே விருது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு சீன அரசு கடும் எதிர்ப்பைத்தெரிவித்து இருக்கிறது.க்சியாபூ வின் நெருங்கிய நண்பரான க்சியாயொன் லியாங்,மற்றும் நாவலாசிரியர் டேனி வெய் லியாங் இருவரும் அடிப்படை மனித உரிமைகளின் குரலுக்கான அங்கீகராம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். bbc தொலைகாட்சி நிறுவணத்தின் செய்தியாளர் ராச்சல்
ப்ரௌன் சீன எதிர்ப்பாளர்களைத் தேடித்தேடி கருத்து வெளியிட்டிருக்கிறார். உலக இலக்கிய அரங்கில் எதிரும் புதிருமான விவாதங்களை எழுப்பக் காத்திருக்கும் இந்த செய்தியை நேற்று வெளியிட்டிருக்கிறார் நோபல் அமைப்பின் தலைவர் தோர்ப் ஜொயென் ஜாக்லாண்ட்.
தியானமென் சதுக்கத்தில் பலியிடப்பட்ட உயிர்கள் விலைமதிப்பற்றவை.உலகமெங்கும் வாழும் மனிதர்களின் விடுதலை கோரிக்கை 1000 சதவீதம் நியாயமானது.சிறியதோ பெரியதோ அடக்குமுறை ரத்தவெறி கொண்டது.
எனினும் நடப்பை ஒப்பு நோக்குவது இப்போது தேவையாக இருக்கிறது.சுமார் 100 மேற்பட்ட படையெடுப்புளில் தனது ராணுவ பூட்சுக் கால்களால் அப்பாவி உயிர்களை நசுக்கியது.வெடிச் சத்தத்தாலும்,கருமருந்துப்புகையினாலும் மானுட அமைதியின் வாசம் சிதைந்து போனது. அந்த உலக ரவுடி அமெரிக்காவின் சுவடுகள் முழுக்க ரத்தத்தால் ஆனது. அதன் வழி நெடுகிலும் சிதறிக்கிடக்கும் எலும்புக்கூடுகளுக்கும், மீந்து வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் இந்த நேரத்தில் கவனத்துக்கு வந்துபோகிறது.
0
ஊதித்தின்னும் விளையாட்டு
மீட்டுபவனின் லயிப்பிற்கேற்ப
இசைமுழக்கும் பறையொப்ப
தன்னுடல் கொழித்து முப்போகமீந்த
நிலமழித்து உமியை விதைத்தவர்கள்
சுருட்டிப்போகிறார்கள் தவசதானியங்களை.
நீரோவின் கதையை நினைவுகள் கிளர்த்தி
தொழிற்பூங்காவின் தந்தையென
பட்டமேற்கிறார் மன்னர்
அந்தப்பொட்டல் வெளி நின்று
ந.பெரியசாமி _புதுவிசை செப் 10
இன்னும் ஐந்து வருடங்களில் இந்திய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காகக் கூடிவிடும் சாத்தியம் இருக்கிறது என்று உலக புள்ளி விபரம் கருத்து தெரிவித்திருக்கிறது.தற்போதைய மதிப்பான 3.5 ட்ரில்லியல் டாலரிலிருந்து 6.4 ட்ரில்லியனாக உயர்ந்துவிடுமாம்.
முன்னதாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது,கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அரசியலுக்கு வருவது,விளம்பர நடிகர்கள் சினிமாவுக்கு வருவது,சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்குவது போன்ற பண்டமாற்று முறைகள் நடந்துகொண்டிருந்ததல்லவா ?. இப்போது அதன் தொடர்கண்டுபிடிப்பாக கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின்
சினிமாவில் நடிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
0
சடுதியில் கடக்க முடியாத வலிமிகுந்த கவிதை ஒன்று
இடம் பெயர் முகாமிலிருந்து.
அந்தகாரத்தில் மூழ்கிப்போன
சாபமிட்ட இரவொன்றில்
நெற்றிப்பொட்டை எடுத்து
நிலத்தில் போட்டு மிதித்தேன்
...
...
...
...
முகாமின் முள்வேலியில்
விஷக்கள்ளிகள் மலரட்டும்
தந்தை பெயரறியாமல்
பிறக்கும் பிள்ளைகளுக்கு
முள்ளின் விஷம் உணர்த்தட்டும்.
சுபாஷ் திக்வெல்ல_ காலச்சுவடு.