Showing posts with label 400வது பதிவு. Show all posts
Showing posts with label 400வது பதிவு. Show all posts

11.1.11

அன்புக்குப் பாத்திரமாவது

காணாமல்போன இரண்டாவதுகாலை
பிரிவின் இழப்பை உணரச்செய்தது
அது உலோகத்தால் செய்யப்பட்ட வஸ்துதான்
அது உருளை வடிவமான சில்வர் குவளைதான்

அதை அவள் டம்ளர் என்று சொல்வாள்
அம்மாவோ போனி என்று சொல்லும்
அது மதுவோடிருக்கையி க்ளாஸ் ஆகும்
கண்ணதாசன்கவிதையில் கிண்ணமாகும்

என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
அது  எட்டுவருடம் என்னோடே இருக்கிறது.
எல்லாக்காலை நேரத்திலும்  ஆவிபறக்க
அது என்னோடே இனிப்பாய் இருக்கிறது.

அளவும் சுவையும் மாறினாலும்
சரிக்கட்டும் ப்ரியமும் பந்தமும் மாறாது.
பாத்திரக்கடையில் குட்டச்சியின் பெயர்
எண்களிலும் நாணயத்திலுமிருந்தது.

அரிசிப் பைக்குபின்னாடி ஒளிந்து கிடந்த
இரண்டு நாட்கள் என் தவிப்பை எடைபோட்டது.
திரும்பக்கிடைத்த மார்கழிக்காலையில்
என்கையில் குளிர் அந்தக்குட்டச்சியுடம்பில் அனல்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
399 முறை வலைமக்களின் அன்பிற்குப் பாத்திரமாகி
கிடந்திருக்கிறேன்.கடந்த ரெண்டு வருடங்கள் எனை அன்பால்
சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்
பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.

நன்றி.