Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts

26.9.10

சிறியதன் ஆவி சிறிது.

இப்படித்தான் இவனுகள்ளாம் நல்ல நேரம் பாத்துக் கழுத்தறுப்பானுக.
ஞாயிற்றுக் கிழமை காலையில் மாடன் வராத கோபத்தில் அலுத்துக்கொண்டார் எஞ்சினியரின் மனைவி.

இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடிகாலையிலேயே ஒட்டைச் சைக்கிளில் வந்துவிடுவார்.
காத்திருந்த நாட்டுக் கோழியை கழுத்துத் திருகுவார்,மயிர் பறிப்பார் பிரதேசம் முழுக்க ரெக்கை பறக்கும்.
சுள்ளிகள் எடுத்து சூட்டாம் போடுவார் மஞ்சள் தடவித் துண்டம் போடுவார்.செத்த நேரத்தில் பிரதேசம் முழுக்க கோழி மணக்கும்.

வாருகால் சுத்தப் படுத்த வாட்டர் டேங்கை கழுவிவிட,தேங்காய் பிடுங்க தென்னம்பாளை சீவி விட
சேர்த்து வைத்துக் காத்திருந்த வேலையெல்லாம்,வீட்டைச்சுற்றிச் சுற்றிச் சுத்தமாகும்.ஒரு சொம்புத்தண்ணியை
வாங்கி மடக்கு மடக்கென்று குடிப்பார்.சட்டையை உதறும்போது கோழிச் சிறகுகள் பறக்கும்.சைக்கிளைத்திருப்பி புறப்படுகையில் பிள்ளைகளின் கோரிக்கையும்,பெண்டாட்டியின் கோபமும் மிதக்கும்.

இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வந்து போனார் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாள் வேலு.இப்போது மாடன்.

இன்னைக்கும் கூட எல்லாம் காத்துக்கிடந்தது.எரிச்சலோடு கேட்டாள் மாடன் வீடு எங்கேயென்று.அப்போதும்கூட தோணவில்லை எல்லோருக்கும் ஒரே ஞாயிறு என்றும்.அவருக்கும் கூட கறித்திங்க எச்சூருமென்றும்.