Showing posts with label நரகம். Show all posts
Showing posts with label நரகம். Show all posts
20.10.10
முகக்கவசம்
கேகே நகரின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன்.17 d யில் ஏறினால் நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஆசிரியர் தேர்வாணையத்துக்குப்போகலாம் என்று சொன்னார்கள்.வந்த பேருந்து நான் நின்றிருந்த இடத்தை நெருங்கி என்னை உரசுகிற மாதிரி வந்தது.பின்புறமாக ஒதுங்கினேன் எனது குதிகாலில் சக்கரத்தை மோதவிட்டு கொஞ்சம் விலக்கி மீண்டும் பயணத்துக்குத்தயாரானான் அந்த இரு சக்கர வாகனக்காரன். சிராய்த்து விட்டது குனிந்து பார்க்குமுன் வண்டியைக் கிளப்பிவிட்டான்.அவனுக்கு என்ன அவசரமோ,எப்படியான தலைபோகிற வேலை காத்துக்கொண்டிருக்கிறதோ,எந்த இலக்குநோக்கிய லட்சியப்பயணமோ தெரியவில்லை.தன்னால் அடிபட்டவன் ஒரு மனிதன் அவனிடம் ஒரு சாரி கேட்கலாம்,இல்லை கருணையோடு ஒரு பார்வை பார்க்கலாம். இது எதுவும் அனாவசியம் என்கிற வேகத்தை எட்டிப்பிடித்து நிறுத்தினேன்.வண்டியின் பின்பகுதியைப்பிடித்து இழுத்ததில் அவனுக்கு கொஞ்சம் கோபம்.நீங்கதான் பின்னாடி பாக்காம வந்தீங்க, தப்பு ஒங்க பேர்லதான் என்றான். என் தவறை ஒத்துக்கொள்கிறேன் மிகச்சரியான சென்னை வாசியான உன் முகத்தைப் பார்க்கவேண்டும் கழற்று உன் தலைக் கவசத்தை என்று சொன்னேன்.கழற்றாமல் விரைந்து சென்றுவிட்டான்.
Subscribe to:
Posts (Atom)