Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

18.12.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல் ( போட்டி நிகழ்சிகள் )


இன்று மதியம் ஜெயா( அப்படிச்சொல்லலாமா?) தொலைக்காட்சியில் ஒரு போட்டி நிகழ்ச்சி நடந்தது. சமயல் போட்டி.எது எதற்கெல்லாம் போட்டி வைக்கலாம் என்கிற வரையரை ஏதும் இல்லை.அது அவரவர்களின் சுதந்திரம். இருக்கிறவன் கொழுப்புக்கு போட்டிவைப்பான் இல்லாதவன் பசிக்கு போட்டிவைப்பான்.கொழுப்புக்கு நடக்கும் போட்டிகளில் நேரமும் பணமும் இன்னபிறவும் விரயமாகும்.இல்லாதவனுக்கு அப்படியில்லை.
நிகழ்சியில் நூடுல்ஸ் சமைத்துக்கொண்டுவந்த ஒரு இளம் யுவதியின் நூடுல்ஸ் நிராகரிக்கப்பட்டது உடனே அவள் கண்ணைப்பிழிந்து கொண்டு அழுதாள். மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

இப்படித்தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளிலும் சிறார்களைப் போட்டிக்கு இலக்காக்கி அவர்களுக்கு தோல்வியைப் பற்றிச்சொல்லிஅழவைத்து அதற்கு பின்னணி இசை அமைத்து காசாக்குகிறார்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பீட்டுப் பேசக்கூட கூடாது என்று உளவியலார்கள்  சொல்லு கிறார்கள். அது ஒரு புறமிருக்கட்டும். தோல்வியடைந்த இந்தக் குழந்தைகளின் இசைத் திறமையோடு புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக்காரர்கலைப் பாட வைத்தால் குழந்தைகள் தான் ஜெயிப்பார்கள். பித்துக்குளி முருகதாசின் தொண்டையையும்,ஏ.ஆர்.ரகுமானின் தொண்டையிலிருந்து வரும் பாடல்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும்போது ஒரு குழந்தையின் பாட்டை நிராகரிப்பது கொடூரம். ஏன்  கே.பாக்கியராஜையும், டீஆரையும் கொண்டாடுவத்ற்கு இங்கொரு கூட்டமே இருக்கிறதே.

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். இந்த உலகம் தனது குழந்தையின் மழலையை கூடிநின்று கேட்டுக்குதூகலித்துக்கொண்டாடுகின்ற உலகம்.அதன் மொழிக்கு இலக்கணம் கிடையாது.  அப்பாவைப் போடா என்று சொல்லும்,விருந்தினரை தொந்தி மாமா என்று சொல்லும்.ஏற்றுக்கொண்டு சிரிப்பதில்லை.இப்போது அது இல்லையா?. எல்லாம் மறந்துப்போய் நடுவர்கள் அப்போது ஒரு தத்துவம் சொல்லுவார்கள். போட்டியென்று வந்துவிட்டால் ஒருவர் தான் ஜெயிக்க வேண்டும் அதனால் நாங்கள் உங்களை நிராகரிக்கிறோம் என்று. இது  போட்டி நடுவர்களின் தத்துவமல்ல.இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து.

எல்லா விலையாட்டிலும் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது இன்னொருவராகவும் தான் இருக்கும். ஆனால் இந்த தாராள உலகமய விளையாட்டில் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது கோடிக் கணக்கிலும் பெருகிவருகிறது. வால்மார்ட் ஜெயிப்பதற்காக இந்தியா தோற்கிறது.விலைவாசி பஸ்கட்டணம் ஜெயிப்பதற்காக
தமிழ் மலையாள உணர்வுகள் பணயம் வைக்கப்படுகிறது.

26.4.11

எண்டோசல்பான்,மோடி,கல்மாடி, க்ளோபல் சல்பான் மற்றும் என் டி டிவி


எண்பத்தாறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.இந்த எண்டோ
சல்பானைத்தான் எதோ புண்ணிய தீர்த்தம் மாதிரி இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவணம் இந்த நிமிடம் வரை விநியோகிக்கிறது சிபாரிசு செய்கிறது. ஆனால் அரசுக்குச் சொந்தமான காசர் கோட் முந்திரி வயல்களுக்கு வான்வழியே தூவப்
படும் முறை இன்னும் அமலில் இருக்கிறது.தெளிக்கப்படும் எண்டோ
சல்பானின் வீர்யநச்சுத்தன்மையால் காசர்கோட் தொடங்கி அதன் சுற்று வட்டாரம் முழுக்க குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள். அங்குள்ள மருத்துவ
மனைக்கு வரும் ஏழைகளில் பெரும்பாலானோர் எண்டோசல்பானால் பதிக்கப்
பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மன்மோகன் வகையறாக்கள் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.இதைவிடக்  கோடிமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த உலகமயம்,தாரளமயம் ஆகியவற்றைச் சகித்துக்கொண்ட உங்களுக்கு இதைச் சகித்துக்கொள்ள முடியாதா என்று ஏளனக்கேள்வி கேட்கிறார்கள். ஆகையினாலே மத்திய அரசு சி எம் ஆர் ஐ க்கு பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நாடு முழுக்க தடைசெய்வது பற்றி யோசிக்கமுடியும் என்று இழுத்தடிக்கிறது. ஏற்கனவே கோக்கொகோலாவில் உள்ள நச்சுத்தண்மை கண்டறியும் விவகார த்தில் இந்திய அரசு நடந்து கொண்டதை நாடறியும். காரணம் அமெரிக் காவை எதிர்த்து ஒரு துரும்பைக்கூட கிள்ளிஎறியமுடியாத நிலைமையில் இருக்கிறது இந்திய வல்லரசு. இதை எதிர்த்தும் நாடு முழுவதும் எண்டோசல்பானை தடை செய்யக்கோரியும் மத்திய  அரசை வலியுறுத்தி கேரளம் போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.

குஜராத் முதலமைச்சர் மோடியின் மீது கவிழ்ந்திருக்கும் ரத்தவாடையை மீண்டும் உலகுக்குச்சொலியிருக்கிறார் சஞ்சய் பட் என்கிற போலீஸ் உயர் அதிகாரி. கோத்ரா சம்பவம் நடந்த பிறகு பெரும்பாண்மை மக்களின் கோபம் அதிகரித்திருந்ததாம்.அந்தக் கோபத்திற்கு வடிகாலாக முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை அனுமதிக்கலாம் என்று ஒரு அரசே முடிவெடுத் திருக்
கிறது. அதற்கான ஆதரங்களையும் தனது சாட்சியங்களையும்  வெளி உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார் சஞ்சய் பட். இந்தச் செய்தியை நீங்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தாலும் எந்த ஊடகத்திலும் கண்டு பிடிக்க முடியாது. மூன்று முறை குஜராத் மக்கள் அமோக ஆதரவு அளித்து பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவரெப்படி கெட்டவராக இருக்கமுடியும் என ஒரு கணினி மென்பொருள் நுட்பவல்லுநர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்.

சொந்தக்கட்சியிலும் கூட்டணிக்கட்சிகளிலும் ஒவ்வொரு மந்திரியாய் கைதாகி உள்ளேபோய்க்கொண்டிருக்க உள்துறை மந்திரி கொல்கத்தாவில் தெருகோணலாக இருக்கிறதென்று கூப்பாடு போடுகிறார்.ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிற மம்தாபானர்ஜியை சினிமாவில் வரும் ரஜினிகாந்தின் அறிமுகம் போல அப்படிப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துகிறது என் டி டிவி. அனில் பாசு மன்னிப்புகேட்டார் என்று ஊடகங்கள் உரக்கக் கூச்சலிடுகின்றன. ஒரு மேடையில் கனிமொழியின் பார்வை ராசாவின் பக்கம் திரும்புவதை,ஒரு தற்செயலான அந்த சிறு கணத்தை திரும்பத்திரும்ப காண்பிக்கிறார்கள். ”.......மணியை நீ வைத்துக்கொள்”  என்கிற ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த கேலிக் குறுஞ்செய்திகளை அனுப்பி சந்தோசப்பட்டுக்கொள்கிறது  டிஜிட்டல் இந்தியா.

எதைச்சொல்வது, எதை மட்டறுப்பது, யாரை முன்னிறுத்துவது என்பதில் நடக்கும் காய்நகர்த்தலில் காலந்தோறும் ஜெயிக்கிறது இந்த முதலாலித்துவ ஊடகங்கள்.

கேப்பையில் நெய் வடிக்கிற இந்த ஊடகங்கள்.

6.12.10

ஓடு,அவர்கள் நகரத்துக்குள் வருகிறார்கள்


(இன்று அம்பேத்கரின் நினைவு தினம்.மும்பை சிவஜி பூங்காவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மரியாதையை செலுத்த திரளும் நாள் இன்று.ஆனால் இந்த பெரும் கூடல் பரவலாக அறியப்படாத ஒரு நிகழ்வாகும்.இந்த தேசம்,அல்லது தலித்துகள்கூட அவரது கனவுகளை உணர்ந்துகொண்டார்களா என்பது இன்னும் கேள்வியாகவே தொடருகிறது.இருப்பினும் லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டவர்களை ஒரே இடத்துக்கு இழுத்துவரும் உந்து சக்தி அவரிடம் இருந்திருக்கிறது. khairlanji the bitter crop என்கிற ஆனந்த் டெல்டும்டே  புத்தகத்திலிருந்து தமிழாக்கப்பட்ட சில பக்கங்கள்)

 " சைத்யா பூமி "  அம்பேத்கர் நினைவஞ்சலி . இதுவரை ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு உணர்வுபூர்வமான அபூர்வ நிகழ்வு. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் இந்த தாழ்த்தப்பட்டவர்களின் பெருந்திரள், நிதானமாகப் பெருகிக்கொண்டே வருகிறது. தங்களின் ஒப்பற்ற வழிகாட்டி பாபாசாஹேப் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட சமத்துவ சகோதரத்துவ ஜனநாயகக் குடியரசு அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் சந்தோசமும் வழங்காவிட்டாலும் கூட அவர்களந்த நாளின் புனிதத்தன்மையின் மேல் களங்கம் வரும்படியான சிறு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். கட்டுக்கடங்காத அந்தப் பெருந்திரள் ஒரு சிறு நூலிழை போன்ற சமதா சைனிக் தல் எனும் தொண்டர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை, ஒழுங்கு படுத்தப்பட்டது.

அதுவரை சமதா சைனிக் தல்லின் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருந்த மும்பை காவல்துறை. வலுக் கட்டாயமாக நிகழ்ச்சியைக் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பீதிப் பிரச்சாரத்தால் தங்களின் மீட்பருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தமுடியாமல் பயத்தில் ஆயிரக்கணக்கான தலித்துக்கள் மும்பை பயணத்தை கைவிட்டுவிட்டார்கள். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு தலித்துக்கள் திரண்ட இந்த பெருந்திரளை காவல்துறையின் கட்டுக்குள் கொண்டு வரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

தலித்துகள் ஒன்றிணையும்போது என்ன விசை உருவெடுக்கும் எனும் அச்சத்தை இந்த வருடாந்திர நிகழ்வு சாத்தியப்படுத்துகிறது. அது தலித் ஒற்றுமைக்கான நம்பிக்கையை விரிவடையச் செய்கிறது. டிசம்பர் ஆறாம் நாள் நிகழ்ச்சியால் மாநிலத்தில் பெருகிவரும் தலித் நம்பிக்கையில் விஷத்தைக்கலக்க ஊடகங்கள் திட்டமிட்டன.

மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறத் தயாராக இருக்கிற இரண்டு மும்பை சிவாஜி நகர வாசிகளின் புகைப்படத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தது மும்பை நாளிதழ். ஒரே ஒரு நாள் தாங்கள் வசிப்பிடத்து தெருக்களில் தலித்துக்கள் நடமாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் செய்திகள் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டன. 5.12.2006 ல் வெளியான தி டெய்லி நியூஸ் அண்ட் அனலைசிஸ் நாளிதழில் " கத்தி முனையில் வசிக்கும் சிவாஜி நகரக் குடியிருப்போர்" என்கிற கட்டுரை மூலமாக உயர் ஜாதிக்காரர்களின் அசௌகரியங்களைப் பட்டியலிடுகிறார் கட்டுரையாளர் ஹைனா தேஸ்பாண்டே.ஒருதலைப் பட்சமான,முன்முடிவுகளோடு புனையப்பட்ட அந்தக்கட்டுரை  பிரிட்டிஷ் காலத்தில் எழுதப்பட்ட நேட்டிவ்ஸ், ஈவென்ட்ஸ் எனும் ஆங்கிலக் கட்டுரையை நினைவுபடுத்துகிறது.

பலர் தங்களின் அன்றாட வேலைகளை மாற்றியமைத்துக்கொண்டார்கள். வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்திக் கொண்டார்கள்.தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. தங்களுக்குள்ளே ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். இரவு நேரத்தில் இறைச்சலாக ஒலிபெருக்கி அலறுகிறது. தலித்துக்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தை அசிங்கமாக்குகிறார்கள். நடைபாதையில் குளிக்கிறார்கள். உடைத்துவிடுவார்களோ என்கிற பயத்தில் கார்களை வெளியே எடுப்பதில்லை. ஒரு நாள் முழுக்க நாங்கள் வீட்டுச்சிறையில் இருக்கிறோம் என்னும் கூப்பாடுகளை ஊடகங்கள் வெளியிட்டன.

// அம்பேத்கரைப்பின்பற்றும் ஜனங்கள் கிராமங்களினின்றும், நகரங்களினின்றும் மும்பையை நோக்கி வந்து குவிவதால் உண்டாகும் அசௌகரியங்கள் தெருக்களில் சிறுநீர்கழிப்பதும், மலம் கழிப்பதும், மட்டுமல்ல. பெண்களைச்சீண்டுவது, அரசுப் பொதுப் போக்குவரத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, என நீள்கிறது. மும்பை மக்களின் பெருமையும் மேன்மையும் அவர்கள் அதீத பொறுமையைப் படித்துக்கொண்டதால் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு தலித்துகளின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதே எனக்குத்தெரிந்த அர்த்தம். தலித்துகள் வசிப்பிடங்களில் இப்படியான அடக்குமுறைகளை எங்கும் காணமுடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிடட்டும், அதிகாரப்பகிர்வுக்காகப் போராடி அதன்மூலம் இந்தச்சமூகத்துக்குள் நுழைவதை வரவேற்கிறேன். அதற்காக மும்பையை நாசமாக்காமல் இருக்கட்டும். //

என்று 5.12.2006 தேதி ஆஃடர்நூன் டெஸ்பாட்ச் அண்ட் குரியர் இதழின் ஆசிரியர் மார்க் மனுவேல்  தலித்துக்களின் மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.இதுதான் சமூக முரண்பாடுகளின் மீது ஒட்டுமொத்த ஊடகங்கள் கொண்டிருக்கும் பொதுப் புத்தியாக இருக்கிறது. கயர்லாஞ்சிக் கொடூரம் மார்க் மனுவேலின் புத்திக்கு தலித் ஒடுக்குமுறை யாகப்  படவில்லை. இதற்கு முன்னால் அரசியல் கட்சிகளாலும் மதவாதி களாலும் சிவாஜி நகர் பூங்காவில் வருடம் முழுவதும் கூடங்கள் கூட்டப் படுகிறது. பொதுச் சொத்துக்களையும், தனியாரின் உடமைகளியும் சூரையாடிக் கொள்ளையடிக்கும் அந்தச்சீரழிவுகள் ஒரு போதும் இதழியலாளர்களின் கண்ணை உறுத்துவதில்லை.

 தங்களின் வசிப்பிடத்துவழியாக ஒரு நாள் கூட நடமாட அனுமதிக்காத மேட்டிமைப்புத்தி தான் இந்த எழுத்து.மேலோட்டமாகப்பார்த்தால் இது மிகச்சரியான அனுகுமுறை மாதிரித்தோன்றும்.ஆனால் இதே அனுகுமுறை ஏனைய பெருந்திரள்களுக்குப் பொருந்தாது.அதற்கு உளவியல் ரீதியன, பரிணாம ரீதியான தத்துவங்களை மேற்கோள் காட்டி அதை ஒரு உன்னதமான நிகழ்வாக உருமாற்றும் தந்திரம் வெளிப்படும். கவர்ஸ்டோ ரியாக.

என் நிலம் எங்கே,எனது இடம் எங்கே,என் தன்மானம் எங்கே,என்ஏதிர்காலம் எங்கே,நான் யார் என்கிற கேள்விகளைப் புதைத்து விட்டு அதைத் தேடியலைகிற 20 சதமான தலித்துகளை புரிந்துகொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டும். அதற்குத்தான் இங்கே பெரும்பஞ்சமாக இருக்கிறது.அதிலிருந்து நீள்கிற ஈரம் தோய்ந்தகைகளை அவர்கள் அறிவார்கள். 

ஒரு சில நேர்மையான பத்திரிகையாளர்கள் இதில் விதிவிலக்காகிறார்கள். சாய்நாத்தும் , ஜோதி புனிவானியும் பிரதான ஊடகங்களின் சார்புத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். கடந்த நாற்பது வருடங்களாக சிவசேனா நடத்தும் தசராக் கொண்ட்டாட்டங்களால் மொத்த மும்பையே திணறடிக் கப்படுவது ஏன் ஊடகங்கலின் கண்ணில் படுவதில்லை. பால்தாக்கரே வெறிப் பேச்சால் ஒவ்வொரு முறையும் சிவாஜி பூங்காவின் சுற்றுவட்டாரம் சூரையாடப் படும்போது மட்டும் அந்தப்பகுதிக் குடியிருப்போர் ஆனந்தம் அடைகிறார்களா?. வருடாவருடம் பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டுமொத்த மும்பை கொண்டாடும்போது, போக்குவரத்து சீர்கெட்டு மாற்றமடைகிறது, ஒலிமாசுபடுகிறது,கடல்நீர் மாசுபடுகிறது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்தில் ஒரு நாள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டுப் போகும் சைத்ய பூமி நிகழ்வை மட்டும் பூதாகரப்படுத்துவது ஏன். தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயை இழிவுபடுத்தியதாக சொல்லி ஜுலை 2006 ல் சிவசேனா கும்பல் நடத்திய, அட்டகாசங்களையும், சூரையாடல்களையும் எதிர்த்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்க துணிச்சலில்லாததுதான் உங்கள் பத்திரிகை நீதியா?.என்று புனிவாணி கேள்வி எழுப்புகிறார்.