ஒலிபெருக்கியின் அலறல் ஓய்ந்திருக்கும். பந்தக்காலில் தொங்கிய வாழைக் காய்களை சிறுவர்களும், பெரியவர்களும்கூடகண்ணசந்த நேரம் பார்த்து திருகிப்போயிருப்பர். கொட்டாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழியில் ஒன்றிரண்டு அதி காலையிலேயேஅடுப்பங்கறைக்கு வந்திருக்கும். வீட்டுக் கொல்லையில்சின்ன அண்டாவில் சோறு கொதிக்கும். என்ன மய்னி அசந்து தூங்கியாச்சா என்று சாடையாகக் கேட்கிறவர்களுக்கு பதிலிருக்கும் ஆனால் தெம்பிருக்காது. பூ, பழம், சந்தனத்தின் வாசம் அப்பிக்கிடக்கிறவீட்டுக்கும் தெருவுக்குமாக நிலைகொள்ளாமல் மனது அலையும். இப்போதுதான் திட்டித்தீர்த்ததாயின்முகம் தேடுகிறது. சாக்கடையும் புழுதியும் மண்டிக்கிடந்த சொந்த ஊர் மணக்கிறது. அவனைத் தெரிந்திராத அவளைச்சுற்றி பெருந்தீ எரிந்து கொண்டே இருக்கும். இன்னைக்கு எண்ணாப்புச் சடங்கு. |
Showing posts with label சடங்கு. Show all posts
Showing posts with label சடங்கு. Show all posts
16.9.09
எண்ணாப்புச் சடங்கு.
Subscribe to:
Posts (Atom)