கோழிக்கடையில்
நெறிபொழிகிறது கூட்டம்.
ஆட்டைக்கண்டு
பயந்தவர்கள் காத்திருக்கிறார்கள்
நீள்வரிசையில்.
பயப்படாமல் காத்திருக்கிறது
வெட்டுப்படாத கோழி.
சட்டைமுழுக்க ரத்தம் மெழுக
வெட்டுப்படுகிறது வெள்ளைக்கோழி.
கல்லாப்பெட்டியைத் திமிருகிறது
காந்தி நோட்டின் வரத்து.
நெடுநேரம் காத்திருந்த
பெண்ணொருத்தி கேட்கிறாள்
'ரெண்டு கோழிக்கால் குடுங்க சாமி'
'எழவு இண்ணைக்கும் ஓசியா'
வீசி எறிகிறான் அகந்தையை.
குப்பைக்கு போகவேண்டியது
குழம்பில் கொதிக்கிறது.
அவள் வீட்டிலும்
கறி மணக்கும் இன்று.