Showing posts with label பதிவர் அறிமுகம். Show all posts
Showing posts with label பதிவர் அறிமுகம். Show all posts

19.9.10

வலையுலகில் நுழையும் சிட்டுக்குருவி.

கரிசல்காட்டிலிருந்து  இன்னொரு வலைப்பதிவர்.
ஒரு இரண்டு ஆண்டுகள் வலைத்தளங்களைக்
கேலி செய்தபடி அதன் மீது ஒரு கண் வைத்திருந்த
தோழர் விமலன்

இன்றுமுதல் வலைத்தளத்திற்குள் காலடி
பதிக்கிறார். காக்காச்சோறு, தட்டாமாலை ஆகிய
தொகுப்புக்களின் ஆசிரியர்.தமுஎகச வின் விருதுநகர்
கிளைநிர்வாகி,தொழிற்சங்கவாதி இப்படி பன்முக
அடையாளம் கொண்ட தன்னை முன் நிறுத்த
ஆசைப்படாத குணாம்சம் கொண்ட தோழர்.
இதோ தனது கவிதையோடு வலையுலகில்
களம் இறங்குகிறார்.

வரவேற்போம்
சிட்டுக்குருவி தளத்தில்
தோழர் விமலனை.