21.1.12

பகடிகளில் கரைந்து போகும் இளைத்தவர் சோகம்

முடி திருத்தக் காத்திருக்கும் நேரங்கள் அலுப்பைத் தருவது போலவே  சுவாரஸ் யத்தையும் தரும். சலூன்காரரிட மான உரையாடலில் ஒரு வாடிக் கையாளர் அவரது முதலாளியைப் பற்றிச் சொன்ன தகவல்கள் இவை. இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.

எங்க முதலாளி போனவாரம் முடிவெட்டக்கூப்பிட்டாரே போகலியா ?

போயிட்டாலும் உள்ள கூலியிலும் பத்து ரூவா ஆட்டயப்போட்டுட்டு குடுப்பாரு ?

பதினேழு வருசம் ஒழச்ச எனக்கே ரெண்டாயிரம் ஓவா குடுத்தாரு ஒனக்கு நல்லா நொட்டுனாரு

ரெண்டாயிரமா பொண்டாட்டி பூவாங்கிக் குடுக்க கூட காணாதே

பூ....வா,நல்லா வருது வாயில.கட்டுபடியாகல, அதா வெளியேறி, பெயிண்டடிக்க போயிட்டேன்

எப்படிய்யா மனசார ரெண்டாயிரந் தர்ராறு, கூட்டிக் கேக்கலயா

கேட்டேன்,இதுவே அதிகமாம். ஆனா வெளிநாட்டுல இருக்கிற மகனுக்கு மாசம் மூனுலட்சம் அது அவருக்கு பத்தலயாம். ஊருக்கு ஒரு நாயம் தனக்கொரு நாயம்.

ரெண்டு பயகல்ல அப்ப மாசம் ஆறுலட்சமா அவிங்க எப்டி

தெரியாதா வந்தவுடன இங்கவந்து  முடிவெட்டுவாய்ங்களே,எதுக்கு

எதுக்கு

அங்க வெட்னா அஞ்சாயிரம் ஆகுமாம் கெளம்புறதுக்கு ஆறுமாச முன்னாடியே முடிவளக்க ஆரம்பிச்சுருவானுக

இதென்ன கூத்தா இருக்கு

இன்னுங் கேளு வார வாரம் கறியெடுப்பாரே எவ்ளோ எடுப்பருன்ற

ஒருகிலோ

ம்ஹும்

அரைகிலோ,

ம்ஹும்

கா கிலோ

ம்ஹும்

நூறுகிராம் எடுப்பாரு

கொழம்பு வச்சா வாசன கூட வராதே,பேசாம மிலிட்டரி ஓட்டல் பக்கமா நின்னு வாசன பிடிக்லாமே ஓசியா 

ஏ பொறு இன்னும் முடிக்கல அந்தகொழம்பயும் சுண்ட வச்சு சுண்ட வச்சு மூனுநாள் தேத்துவாரு.

4 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

vasu balaji said...

:))

பத்மா said...

hahaha

hariharan said...

கஞ்சப்பிசினாரியப் பத்தி கேள்விப்பட்டிருக்கொம். வேட்டியை அவுத்து மடிச்சிவச்சுட்டுத்தான் உறங்குவாரோ?