வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன். சுவைக்கநேர்ந்ததென் பசியாற. எழுத்தில் தெரியுமா கரங்களின் மென்மை. |
31.10.09
வலை மீது அலை பாயும் மனசு
30.10.09
எளிய மக்களின் கையிருப்பான நம்பிக்கையில் ஒன்று குறைகிறது.

நேர்மை,எளிமை, அர்ப்பணிப்பென்னும் ஆடம்பர அரசியலில் காணக்கிடைக்காத அரிய குணங்களோடு இரண்டு முறை மதுரை தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினராயிருந்த தோழர் பொ.மோகன் அவர்கள் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார். கடந்த இருபது வருடங்களில் பலமுறை தொழிற்சங்க நிகழ்வுகளில் சந்திக்க நேர்ந்த தலைவர். பாராளுமன்ற உறுப்பினராவதற்குமுன்னாள் அவரிடம் இருந்த எளிமையில் ஒரு சிறு துரும்பளவுகூட மாற்றம் இல்லாமல் காணக்கிடைப்பது இன்றைய இந்திய அரசியலில் அரிதானது. உழைக்கிற மக்களுக்காக, அடித்தட்டுமக்களுக்காக, போராடும் தொழிற்சங்கங்களுக்காக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் இருக்கும் குறைவான நம்பிக்கைகளில் ஒன்று மறைந்து போயிருக்கிறது. தோழர் மோகன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. |
வினோத ஒலிகளின் வரைபடம்

தொலைக்காட்சியும்,அலைபேசியும்,
கணினிப் பெட்டியும் கைவராத காலத்து
மொட்டை மாடிகளின்
மின்காந்த அலைகளிடறா நாட்கள்.
எட்டாவது வீட்டின் மொட்டைமாடியிலும்
காக்கைகுருவிகள் விரட்டவந்தாள்
கண்காந்த அலைகள் ஊடறுத்தபோதுகாய்ந்திருந்த
தானியங்களில் மீளப் பாவிக்கொண்டிருந்தது.ஈரம்
தனை நோக்கி அழைக்க மொட்டை மாடியில்அநேக
காரணங்கள் காய்ந்து கொண்டிருந்தது
ஜெயகாந்தனின்ஆத்மாநாமும், திஜாவின் பாபுவும்
எலிப்புளுக்கையாய் கிடந்தார்கள்
இருப்பை அறுத்துப் புலம் பெயர்ந்த நாளின்
அங்கேதான் கண்ணீரையும் காயவிட்டாள்
பெயரறியாப் பறவையின் மொழியெல்லாம்
மொட்டை மாடிவரைபடமாகும் விநோத நினவாக.
Subscribe to:
Posts (Atom)